12/28/2012

சென் கதை ( Zen stories )

 

சென் கதை

புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் சீடர்கள், அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.

புத்தர் தம் சீடர்களை நோக்கி “ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார்.
எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“எழுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“அறுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“ஐம்பது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்
“தவறு“ என்றார் புத்தர்.

இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே! மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள்.

சில வினாடிகள் அமைதியாக இருந்தார் புத்தர்.

பிறகு அவர் “அது ஒரு மூச்சு“ என்றார்!

“வெறும் மூச்சுவிடும் நேரம்தானா?” என்று கேட்டார் ஒரு சீடர்.
அப்படியல்ல.
வாழ்வு ஒரு கணமன்று.!
ஆனால் ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்.!
ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும்.!
கணம் கணமாக வாழவேண்டும்! என்றார் புத்தர்.


சிலர் நேற்றில் வாழ்கிறார்கள். நேற்றைய நினைவில் மூழ்கி இறந்தகாலத்தில் வாழ்கிறார்கள்.
சிலர் அறியப்படாத எதிர்காலத்தில், எதிர்காலக் கனவில், எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்கிறார்கள்.
அவர்கள் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்.
எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற அந்தகர்களாக (கண்பார்வையற்றவர்களாக) இருக்கிறார்கள்.


கணத்திற்குக் கணம், நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும் என்பது சென் தத்துவம்.
                 
************************************************************
A Cup of Tea ( Zen)
Nan-in, a Japanese master during the Meiji era (1868-1912), received a university professor who came to inquire about Zen.
Nan-in served tea. He poured his visitor’s cup full, and then kept on pouring.
The professor watched the overflow until he no longer could restrain himself. “It is overfull. No more will go in!”
“Like this cup,” Nan-in said, “you are full of your own opinions and speculations. How can I show you Zen unless you first empty your cup?”

-Partha.
Source, Myrko Thum.

 

12/23/2012

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ( SRI RAGHAVENDRA SWAMY )


ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
 
Sri Raghavendra Swamy


பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||


வெங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வெங்கடாஜலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு வெங்கடநாதன் என்று பெயரிட்டனர்.
வெங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராஜ பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை அவர் மைத்துணர் திரு லக்ஷ்மீ நரசிம்ஹாசாரியாரிடம் மதுரையில் பயின்றார். அவர் மதுரையிலிருந்து திரும்பியவுடன் வெங்கடனாதர் சரஸ்வதி என்பவரை மணந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு அவர் கும்பகோணத்திற்க்கு குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களின் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். அதற்கு அவர் தன் மாணவர்களிடம் எந்த பணமும் எதிர்ப்பர்ப்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.
வெங்கடநாதருக்கு மனதிற்குள்ளே ஸ்தோத்திரம் சொல்லும் பழக்கம் இருந்தது. ஒரு முறை அவர் கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு அழைக்கபட்டார். அழைத்தவர் வெங்கடநாதரை சரியாக நடத்தவில்லை. அவர் தான் வழங்கும் விருந்திற்க்கு ஏதேனும் வேலை வாங்க வேண்டும் என்று வெங்கடநாதரை சந்தனம் அறைத்துதரச் சொன்னார். அந்த சந்தனம் மற்ற விருந்தினர்க்கு உடம்பில் பூசிக்கொள்ள கொடுக்கப்பட்டது. அவ்வாறு பூசிக்கொண்ட விருந்தினர்க்கு உடல் முழுக்க எரிச்சல் ஏற்பட்டது. வியப்படைந்த அழைத்தவர், வெங்கடநாதரை கேட்டபோது அவர் சந்தனம் ஆரைக்கும்போது 'அக்னி சுக்தம்' என்ற ஸ்தோத்திரத்தை ஜபித்ததாகவும் அதன் காரணமாகவே அந்த எரிச்சல் ஏற்பத்டததாகவும் கூறினார். இவ்வாறு கூறிய வெங்கடநாதர் வருண மந்திரத்தை ஜபித்து விருந்திற்க்கு வந்தவர்களின் எரிச்சலை போக்கினார். அதன் பிறகு, அழைத்தவர் தான் தவரை உணர்ந்து அவரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு நல்ல முறையில் கவுரவித்தும் அனுப்பினார்.
துறவறம் ஏற்ற குரு ராகவேந்திரர்
வெங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்க்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வெந்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும் அவர் விருப்பத்தை வெங்கடநாதரிடம் தெரிவித்தார். வெங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
வெங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவரம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.

 அதிசயங்களும் அற்புதங்களும்

பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்க்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் ஸ்ரீமத் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அரிஞ்யர்களை ஊக்குவித்தல் பொன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ!  ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ! ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ!

Thanks :- Wikipedia.
Partha.

12/15/2012

தியானம் (Power of Meditation)

 

 தியானம்
 
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அது நம் மனத்தின் இயல்புகளில் ஒன்று. தியானம் என்று நாம் இன்று சொல்லி வருவது அந்த இயல்பானசெயல்பாட்டை இன்னும் விரிவாக, திட்டமிட்ட முறையில், முறையான பயிற்சியுடன் அமைத்துக் கொள்வதைத்தான்.
நம் மனம் நம்முள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிரது. மனம் என்றால் என்ன என்றால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களின் அறுபடாத நீட்சி என்று பதில் சொல்லலாம். மூளையின் நியூரான்களுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்பாடலின் விளைவு இது என்று நரம்பியலாளர்கள் பதில் சொல்லக்கூடும்.
அந்த செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனித்தால் பிளாட்டிங் பேப்பரில் மை மரவுவது போல மிக இயல்பாக அது தன் விளிம்புகளில் இருந்து விரிந்து விரிந்து பரவிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதற்கு இலட்சியம் இல்லை. அமைப்பு இல்லை. மையம் இல்லை. அதாவது நாமறிந்த எந்த ஒருங்கிணைவும் அதற்கு இல்லை. அது ஒரு தன்னிச்சையான பிரவாகம்.
இந்த மனச்செயல் நின்று, அது இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம் அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.
உள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்.
அந்தச்செயலே இயல்பான தியானமாகும். நாம் ஒரு ஆழமான அனுபவத்தை அடையும்போது மெய்மறந்த நிலையில் இருக்கிறோம். அப்போது நமக்குக் கிடைக்கும் எந்த அறிவும் நம் நினைவிலிருந்து மறைவதே இல்லை. நம்முடைய சிறந்த ஞானம் முழுக்க முழுக்க அந்த மெய்மறந்த தருணங்களில் நாம் அடைந்தனவாகவே இருக்கும். சொல்லப்போனால் கலையில் இலக்கியத்தில் பயணத்தில் நாம் தேடிக்கொண்டிருப்பதெல்லாம் மெய்மறக்கும் அந்த அனுபவத்தை மட்டுமே.
அந்த மெய்மறக்கும் தருணத்தில் என்ன நடக்கிறது? ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நம் மனம் இல்லாமலாகிவிடுகிறது. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள இன்னொரு ஆழம் திறந்துகொள்கிறது. அந்தக் கணத்தின் அனுபவத்தை அறிவது அந்த ஆழம்தான்.
ஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத் என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு.
ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமி, நுரை, அலை என்று வைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது. அதாவது கடல்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.
ஆகவே, நாம் நம் ‘மெய்மறந்த’ நிலையில் அடையும் அனுபவமென்பது நம் ஜாக்ரத் விலகி நிற்கும் ஸ்வப்ன நிலையே. அது மேலும் தீவிரமாக இருந்தால் ஸ்வப்னமும் விலகி சுஷ¤ப்தி நிலையை கொண்டிருக்கிறது. அது அதி உக்கிரமானதாக இருந்தால் அது துரிய நிலையை அடைந்துவிடுகிறது
நாராயணகுரு துரியநிலையை ‘அறிபவன், அறிவு, அறிபொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றாகி நிற்கும் நிலை என்று தன் அறிவு என்னும் நூலில் சொல்கிறார். பேதமில்லாத அந்த நிலையையே அத்வைதம் இரண்டின்மை என்று சொல்கிறது. சிறிய அளவிலேனும் இந்த இரண்டற்ற நிலையை சில கணங்கள் அனுபவிக்காத மனிதர்களே பூமியில் இருக்க மாட்டார்கள்.
அந்த நிலையை பயிற்சியின்மூலம் அடைய முடியுமா என்பதே தியான மரபின் நோக்கமாகும். இந்திய ஞானமரபில் தொல்பழங்காலம்முதலே அதற்கான பயிற்சிகள் ஆரம்பித்து விட்டன. இதை யோகம் என்றார்கள். யோகம் என்றால் இணைதல் என்று பொருள். அறிபடுபொருளும் அறிபவனும் இணையும் நிலையை அப்படிச் சொன்னார்கள். தியானம் என்பது யோகத்தின் முதல்படி.
இந்திய மரபில் உள்ள எல்லா ஞானமுறைகளுக்கும் யோகம் பொதுவானது. என்றாலும் பௌத்தமரபிலேயே அதற்கு முதல்முக்கியத்துவம் . அதற்கடுத்தபடியாக சமணத்தில். பின்புதான் இந்து ஞான மரபுகளில்.
தொல்தமிழில் தியானம் ஊழ்கம் எனப்பட்டது. ஆழ்தல் என்னும் சொல்லுக்கு ஊழ்தல் என்னும் ஒலிமாறுபாடும் உண்டு . ஊழ்கம் அதிலிருந்து வந்தது. ஊழ்கம் செய்பவர்கள் ரிஷிகள் என்று சம்ஸ்கிருதத்திலும் படிவர் என்று தமிழிலும் சொல்லப்பட்டார்கள்.
பதஞ்சலி யோக சூத்திரமே இந்திய ஞானமரபின் முதன்மையான யோக நூலாகும். அதற்கு ஒரு உரை எழுத ஆரம்பித்தேன். இந்த இணையதளத்தில் இரு அத்தியாயங்கள் வெளியாகின. முடிக்கவேண்டும்.
தியானம் என்றால் எதுவெல்லாம் அல்ல என்று இப்போது தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒன்று, வேண்டுதல் அதாவது பிரார்த்தனை என்பது தியானம் அல்ல. சமீபகாலமாக கிறித்தவ மத நிகழ்ச்சிகளில் அப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். லௌகீகமாகவோ அல்லது வேறுவகையிலோ நமக்குத்தேவையானவற்றை ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதற்குத்தான் வேண்டுதல் என்று பெயர். அது ஒருபோதும் தியானம் அல்ல.
தியானத்துக்கு ஒரு கடவுள் தேவை இல்லை. முன்னிலைச்சக்தி ஒறு தேவை இல்லை. தியானம் ஒருநிலையிலும் உலகியல் லாபங்களுக்கான அல்லது சொற்கத்துக்குப் போவதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது ஆழமான அறிதல் நிலை முழுமையான இருத்தல்நிலை ஒன்றை அடைவதற்கான யத்தனம் மட்டுமே.
வழிபாடுகள், தொழுகைகள், கூட்டுப்பிரார்த்தனைகள் ஆகியவற்றுக்கும் தியானத்துக்கும் முழுமையான வேறுபாடு உண்டு. இவை செயல்படும்தளமே வேறு. தியானம் கடவுள் சார்ந்தது அல்ல. தியானத்தில் தியானிப்பவன் மட்டுமே இருக்கிறான், அவனைச்சுற்றி அவன் அறியும் பிரபஞ்சம் இருக்கிறது. ஆகவே நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் எல்லாம் உரிய ஒரு வழிமுறை அது.
யோகத்தை நமக்கு ஒருவர் கற்றுத்தரவேண்டுமா என்றால் வேண்டியதில்லை என்றே சொல்லலாம். நம் மனதை நாம் கவனித்து அதன் இயல்புகளை உணர்ந்து மெல்ல மெல்ல ஒழுங்குபடுத்துவதற்கு புற உதவி தேவையே இல்லை. ஆனால் நடைமுறையில் தேர்ந்த உதவி இல்லாவிட்டால் பலவகையான வழிதவறுதல்கள் ஏற்பட்டு சக்திவிரயம் ஏற்படும்.
உதாரணமாக தியானத்தில் அமரும் ஒருவர் தன் மன ஓட்டத்தை தொகுத்துக்கொள்ள ஓர் ஒலியை — அதாவது தியானமந்திரத்தை — பயன்படுத்துவது வழக்கம். அவர் அதை தன் மூச்சுக்காற்றின் தாளத்துடன் இணைத்துக்கொண்டாரென்றால் அந்த ஒருமுகப்படுத்தல் இயல்பாக நிகழும். தியானம் நன்றாக நிகழ்வது போலவும் இருக்கும். பலவருடங்கள் இந்த மாயை நீடிக்கும். பின்னர் தெரியும் அவர் மனதை ஒருமுகப்படுத்தவில்லை, மூச்சுக்காற்றுக்கு ஒரு ஒலியை அளித்திருக்கிறார் என. மந்திரத்தை மூச்சுடன் இணைக்கக் கூடாது என்பது ஓர் அனுபவப் பாடம்.
அத்தகைய அனுபவ பாடங்களை நமக்கு அளிப்பவரே குரு. குரு இல்லாமல் தியானக்கல்வியை முழுமையாக அடைய முடியாதென்றே நினைக்கிறேன். ஞானிகளுக்கு அது ஒரு பொருட்டு அல்ல. குரு என்பவர் நம்மைந் அன்கறிந்த, நம் அந்தரங்கத்துக்குள் எளிதாக வரும் வல்லமைகொண்ட, நம் மீது அளவில்லாத பிரியம் கொண்ட ஒரு மனிதர். அவரது வழிகாட்டல்கள் நம்மைக் கொண்டுசெல்லும் அளவுக்கு நூல்கள் கொண்டுசெல்லாது என்பதே என் அனுபவம்.
இப்போது பல்வேறு யோக அமைப்புகள் யோகமுறைகளை கற்றுக்கொடுக்கின்றன. ஆரம்பநிலையில் அவை உதவிகரமானவை. அங்கே ஆரம்பவிதிகளும் அவற்றை பயிற்றுவிக்கும் வழிகாட்டுநர்களும் அங்கே உள்ளனர். அவர்கள் நம்மை ஓர் எல்லைவரை வழிகாட்டக்கூடும்– எனக்கு அவர்களிடம் அனுபவம் இல்லை. ஆனால் ஒரு தனிப்பட்ட குருவே அடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசெல்லமுடியும்.
மிக எளிய அடிப்படையில் ஆனாலும்கூட தியானம் மன அமைதிக்கும் சமநிலைக்கும் மிக மிக உதவிகரமானதுதான். ஆகவே எங்கே எப்படி தியானம் செய்தாலும் அது நல்லதுதான். ‘சரியான’ தியானமென்று ஒன்று இல்லை. ‘சரியான தியானத்தைச் செய்பவரே’ இருக்கிறார். தியானத்தை தொடர்ச்சியாக, விடாப்பிடியாக, கூர்ந்த அவதானத்துடன் செய்வதே முக்கியமானது.
தியானத்தின் வழிமுறையை மிக எளிமையாக இவ்வாறு விளக்கலாம். மனதைக் குவியச்செய்தல், மனதை அவதானித்தல், மனதை கரையவைத்தல் என்னும் மூன்றுபடிகள்
முதல்படி, மனதைக் குவியச்செய்ய முயல்வது. இது பிரிந்து பரவும் மனதின் இயல்புக்கு நேர் எதிரானது. இதன்மூலம் நாம் மனதின் கட்டற்ற இயக்கத்தை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவருகிறோம். இதற்கான வழிகள் பல. ஓர் ஒலியில் மனதை குவியச்செய்யலாம். இதற்கு மந்திரம் என்னும் பொருளில்லாத ஒலி [ஓம், ரீம் போல] உதவுகிறது. அல்லது ஒரு பிம்பத்தில் பார்வையைக் குவிக்கலாம். அல்லது இரண்டையும் செய்யலாம்.
மனதைக் குவித்தல் மிகமிக கடுமையான செயல். மனம் என்னென்ன மாயங்கள் காட்டும் என நாம் அப்போது அறிவோம். நாம் மனதைக் குவியச்செய்ய முயன்றால் மனதைக்குவியச்செய்யும் செயலைப்பற்றிய எண்ணங்களாக நம் மனம் ஆகிவிடும். எதைப்பற்றி எண்ணக்கூடாதென நினைக்கிறோமோ அந்த எண்ணங்களே அதிகமாக எழும். கூடவே அதை அடக்கும் எண்ணங்களும் அதே எண்ணிக்கையில் எழும்.
இவ்வாறு மனதைக் குவிக்க முனைகையில் தவிர்க்க முடியாமல் நாம் நம் மனதை கவனிக்க ஆரம்பிக்கிறோம். நம் மனம் எப்படி இயங்குகிறது என்பதைக் காணும்போது அதை மெல்ல மெல்ல புரிந்துகொள்கிறோம். நீங்கள் தியானத்தில் இருக்கும்போதுதான் நீங்கள் எத்தனைபெரிய சுயமையவாதி என்று தெரியும். நீங்கள் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும். உங்கள் அற்ப பாவனைகள் அற்ப ஆசைகள் சிறுமைகள் எல்லாமே தெரியும்.
அந்த அறிதல் மூலம் அவற்றை நீங்கள் தாண்ட முடியுமென்றால்தான் தியானம் கைகூடுகிறது என்று சொல்லமுடியும். தியானம் மெல்லமெல்ல பல காலமாக உங்களில் நிகழ்ந்து ஒரு கட்டத்தில் நீங்கள் சில கணங்கள் மனமிலா நிலையை அடையமுடியும். அப்போது ஒரு கணத்தில் நீங்கள் அறிவதை எத்தனை படித்தாலும் விவாதித்தாலும் அறிய முடியாதென அறிவீர்கள். அதுவே தியானம்.
 
What meditation exactly means. ( Sri Aurobindo)  There are two words used in English to express the Indian idea of dhyАna, "meditation" and "contemplation". Meditation means properly the concentration of the mind on a single train of ideas which work out a single subject. Contemplation means regarding mentally a single object, image, idea so that the knowledge about the object, image or idea may arise naturally in the mind by force of the concentration. Both these things are forms of dhyАna, for the principle of dhyАna is mental concentration whether in thought, vision or knowledge.
There are other forms of dhyАna. There is a passage in which Vivekananda advises you to stand back from your thoughts, let them occur in your mind as they will and simply observe them and see what they are. This may be called concentration in self-observation.
This form leads to another, the emptying of all thought out of the mind so as to leave it a sort of pure vigilant blank on which the divine knowledge may come and imprint itself, undisturbed by the inferior thoughts of the ordinary human mind and with the clearness of a writing in white chalk on a blackboard. You will find that the Gita speaks of this rejection of all mental thought as one of the methods of yoga and even the method it seems to prefer. This may be called the dhyАna of liberation, as it frees the mind from slavery to the mechanical process of thinking and allows it to think or not to think, as it pleases and when it pleases, or to choose its own thoughts or else to go beyond thought to the pure perception of Truth called in our philosophy VijЬАna.
Meditation is the easiest process for the human mind, but the narrowest in its results; contemplation more difficult, but
greater; self-observation and liberation from the chains of Thought the most difficult of all, but the widest and greatest in its fruits. One can choose any of them according to one's bent and capacity. The perfect method is to use them all, each in its own place and for its own object; but this would need a fixed faith and firm patience and a great energy of Will in the self-application to the yoga.
- Partha.
 

12/13/2012

ஷீரடி சாய் பாபா



மகான் ஷீரடி சாய் பாபா அவதாரம்


இந்தியாவின் மகாராஷ்டிரா மாகாணத்தில் உள்ள ஷீரடி என்ற கிராமத்தில் அவதரித்த ஒரு மகான்.இவர் அந்த கிராமத்தில் 60 ஆண்டு காலம் வாழ்ந்துள்ளார்.இவர் எந்த நேரமும் ஒரு தெய்வீக மயக்க நிலையில் இருந்தார்.

ஒரு வேப்ப மரத்தடியில் தியானம் செய்வதும்,அலைந்து திரிந்து தன்னிச்சையாகவும் வாழ்ந்த மகான்.
 
இவரது தாய் தந்தை பற்றிய விவரங்கள் தெளிவாக தெரியவில்லை என தெரியவருகின்றது.இவர் இந்து மற்றும் இஸ்லாமிய திருவிழாக்களில் கலந்து கொண்டவர்.ஆனால் இவர் இந்து மதத்தை சார்ந்தவர் ஆவார். சிவபெருமானின் வாக்கின்படி ஸ்ரீ சாய் நாத் பிறந்ததாக கூறப்படுகிறது.
தெய்வீக அம்சமான சாய் நாத் ஒரு முஸ்லீமைப் போல உடை அணிதிருந்தாலும் இவரின் காதுகள் இரண்டும் துளைகள் இடப்பட்டிருந்தன.இந்த வழக்கம் "நாத்" பரம்பரையின் நடைமுறை வழக்கில் இருந்ததாக தெரிய வருகிறது.எனவே மகான் மச்சேந்திரநாத், கோரக்நாத், போன்ற அனைவரும் நாத் பரம்பரையை சார்ந்தவர்கள் என்று பேசப் படுகிறது.

இந்த இனத்தார் வட இந்தியா,நேபாளம்,காட்மாண்டு போன்ற இடங்களில் வாழ்ந்து வந்ததாக தெரியவருகிறது.ஸ்ரீ சாய் நாத்தின் ஷீரடியிலுள்ள புண்ணிய தளத்திற்கு தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்கதர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட சாய் கோவில்கள் அமைந்துள்ளன.
 
இதுபோல் உலகில் பல்வேறு இடங்களிலும் பாபா விற்கு கோவில்கள் உள்ளன.அதேபோல் சென்னையில் மறைமலை நகருக்கு அருகிலுள்ள சட்ட மங்கலத்தில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் பாபா வழிபாட்டுத் தலம் அவதார புருஷர் பால யோகி பாலா சாய் அவர்கள் மூலம் சிறப்பாகச் செயல்ப்பட்டு வருகிறது.

சாய் அவர்களது வாழ்நாளில் இறப்பிற்கு முன்னும் பின்னும் உள்ள வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.நிகழ்கால நிகழ்வுகளிலே மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்படுத்த அவர் விழைந்தார்.இவர் மக்களுக்கு பல்வேறு அற்புதங்களையும் ஆச்சர்யங்களையும் நிகழ்திக் காட்டியவர்.
 
கடைசி வரையிலும் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளதவர்.மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளில் இருந்து பல பிறவிகளில் இருந்தும் விடுபடுவதற்காக அவர்களை தம் பக்கம் இழுத்து உதவி செய்து அவர்களை பண்படுத்தி,ஆன்மிக வழியில் முன்னேற்ற மடைய செய்வதே பரம சத்குரு வான சாய் நாதனின் முக்கியப் பணியாக இருந்தது.

               எனவே சாயின் மகிமை அசுர வேகத்தில் இன்று உலகில் பரவிவருகிறது.அவரை நெருங்கி செல்ல அனைவரும் முயற்சி மேற்கொள்வோமாக ! ஷீரடி சாய் பாபா அவர்கள் 1918 ஆண்டு அக்டோபர் 15 இல் தனது பூத உடலை நீத்தார்.உயிர் நீத்த இடம் " சமாதி மந்திர் " என அழைக்கப்படுகிறது.

               பாபா தனது மறைவிற்கு பின்னும் தனது சமாதி பேசும் என்றும்,தன்னை அன்புடனும்,நம்பிக்கையுடனும் நினைக்கும் அன்பர்களுக்குத் தான் தொடர்ந்து நன்மை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.எனவே நாமும் ஒரு முறை ஷீரடி சென்று வர முயற்சி மேற்கொள்வோமாக !
 
  "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"   





சும்மா இருப்பது சுலபமா ?

                                     

சும்மா இருப்பது சுலபமா ?

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்
திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவு கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "

அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது

உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

தென்கச்சி கோ சுவாமிநாதன்.

-Partha.    

ஷீரடி சாயிபாபா

மகான் ஷிர்டி சாய் பாபா



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK_fRLwXXz2BewT-550PKAAEGw0uMHzeDYh3V81rW1vmtq5-dVGR8auG6CakiXpXdlMNAiKpM997paoudZYl91xKpayIBYfGAfxKvTZb0-O8msxAQeQk-CT4T0w9UNJSZycqJ5o1MEUZM-/s1600/golden-throne-shirdi-sai-baba-posters-collection-free.jpg
 
 

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம்

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தன்னோ சாய் ப்ரசோதயாத்

தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008

முறை பாராயணம் செய்ய வேண்டும்.

 

ஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி


ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்



 

 

"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி" 

- Partha

11/29/2012

ஜென்

   போதி தர்மர் ஒருமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருக்கிறார். சின் மோன் சில பிக்குகளுடன் அம்மரம் அருகே வருகிறான். போதி தர்மர் தியானத்தில் இருப்பதைப் பார்த்தவாறே, "உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன். தாமரை சேறுநிறைந்த குளத்தில் மலர்கிறது. நாம் மலரை மட்டுமே பார்த்து பறிக்கவேண்டும். சேறு நம் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்கிறான்சின் மோன்.

"உங்க பேச்சு உண்மையை உணர்த்துவதாக உள்ளது. மலரை சேறில்இருந்து எடுப்பதென்பது.. நன்மையை எடுத்துக் கொண்டு தீமையை விட்டுவிடவேண்டும். அற்புதம்!! அற்புதம்!!" என்கிறான் சின் மோனின் இடதுப் புறமிருக்கும் பிக்கு.

"அனைத்தும் விதிப்படியே வளர்கிறது. தாமரை சேறில் இருந்து தோன்றுகிறது எனில் அந்தச் சேறும் நல்லதாகவே இருக்கும்" என்று கண்களைத் திறக்காமலேயே சொல்கிறார் போதி தர்மர்.

"என்ன? சேறு எப்படி நல்லது ஆகும்?" என்கிறான் சின் மோன்னின் இடதுப் புறமிருக்கும் சீடன்.

"நீங்கள்சொல்வதைப் பார்த்தால்.. அனைத்து தீமைகளிலும் ஒரு நன்மை இருக்கும் என்பதுபோல் உள்ளது. என்னத் தத்துவம் இது?" என்று கேட்கிறான் சின் மோன்.

மெல்ல கண்களைத் திறக்கும் போதி தர்மர், "நன்மை தீமை என எதுவும் இல்லை. எல்லாம் மனதைப் பொருத்தது" என்கிறார்.

"அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்" என்கிறான் ஒரு பிக்கு.

"என்ன அர்த்தத்தை நீ பெருசா பார்த்துட்ட!?" என்று அந்த சீடனை அடிக்க கையை ஓங்குகிறான் சின் மோன்.


"ம்ம்.."என்று அழுத்தமாக கண்டிப்பது போல் சப்ததித்து விட்டு, "கையை உயர்த்திய பின்முஷ்டியை மடக்கினாயா? முஷ்டியை மடக்கிய பின் கையை உயர்த்தினாயா?
" என்று நிதானமாக சின் மோன்னைக் கேட்கிறார் போதி தர்மர்.

சின்மோன்னின் இடதுப் புறமிருக்கும் பிக்கு தன் கையைப் பார்த்தவாறு, "இது கோழிமுதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா கதை மாதிரி இருக்கு"என்கிறான்.

பிக்குகள் தங்களுக்குள், முட்டை தான் முதலில் வந்தது என்றும்.. கோழி தான் முதலில் வந்தது என்றும் விவாதித்துக் கொள்கிறார்கள்.

"முன்பு, பின்பு என்ற ஒழுங்கு முறை எதுவும் இல்லை. இரண்டுமே சரி தான். அது விளைவுகளையும், சூழலையும் பொறுத்தது."

"எனக்குப் புரிந்து விட்டது" என்கிறான் சின் மோன்னின் வலதுப் புறம் இருக்கும் பிக்கு.

"உனக்கு புரிந்து விட்டதா? என்னப் புரிந்து விட்டது?" என கேட்கிறான் சின் மோன்.

"அனைத்துமே விளைவுகளையும், சூழலையும் பொறுத்தது. நாம் பிடிவாதமாக இருக்கக் கூடாது. விதியின் வழி செல்லணும்."

போதி தர்மர் ஆமோதிப்பது போல் தலையசைக்கிறார்.


சின் மோன், "எனக்கு எதுவும் புரியவில்லை" என்கிறான்.

"உனக்கு புரிய வைக்கும் ஆள் ஒருவரை நீ தேடிக் கொள்" என்கிறார் போதி தர்மர்.

"ம்க்கும்.. அது நீங்க தான் என நினைத்துக் கொண்டிருந்தேன்" என்கிறான் சின் மோன் அலட்சியமாக.

"அது நான் இல்லை. நீயே தான்" என எழுந்து செல்கிறார் போதி தர்மர்.

திடுக்கிடும்சின் மோன் அவர் பின்னால் சென்று, "நீங்கள் நிறைய படித்தவர். உங்கள்மரணத்திற்குப் பின், எங்கே செல்வீர்கள் எனத் தெரியுமா!?" என்று கேட்கிறான்சின் மோன்.

நின்று நிதானமாக, "எனக்குத் தெரியாது" என்கிறார் போதி தர்மர்.

"பார்த்தீர்களா உங்களுக்குத் தெரியாததும் ஒன்று இருக்கிறது" என்று சிரிக்கிறான் சின் மோன் மடக்கி விட்ட மகிழ்ச்சியில்.

"ஆமாம். ஏனெனில் நான் இதுவரை இறந்ததில்லை."

சின் மோன் வாயடைத்து போய் நிற்கிறான்.

அம்மடத்தில் தியான அறை ஒன்றுள்ளது. அவ்வறை வாசலில் ஒரு பிக்கு நின்றுக்கொண்டு, "உள்ளே சென்று பேசக் கூடாது" என உள்ளே செல்பவர்களிடம் எல்லாம்சொல்கிறார். போதி தர்மர் அவ்வறையை முன் நின்று பார்க்கிறார். மூன்று பகல்,மூன்று இரவுகளுக்கு சேர்ந்தாற் போல் தியானம் செய்ய இவ்விடம் என்கிறார்போதி தர்மரிடம் வாசலில் நிற்கும் பிக்கு. வாசலில் நிற்பவரை வணங்கி விட்டுபோதி தர்மர் தியான அறைக்குள் செல்கிறார். அவ்வறைக்குள் சின் மோன்னும்இன்னும் மூன்று பிக்குகளும் அமர்ந்துள்ளனர்.

இரவு வருகிறது. எங்கும் நிசப்தம் நிலவுகிறது. தூங்கி வழியும் பிக்கு ஒருவன் திடுக்கிட்டு விழிக்கிறான். குற்ற உணர்வில் அனைவரையும் ஒருமுறைப் பார்க்கிறான். எதிரில் அமர்ந்திருப்பவனின் முகம் தூக்க ரேகைகளுடன் சலனமுற்று காணப் படுகிறது. 'தான் மட்டும் தூங்கவில்லை' என்ற திருப்தியில் கள்ளப் புன்முறுவல் செய்தவாறு மீண்டும் கண்களை மூடிக் கொள்கிறான். காற்று பலமாக வீச சாளரக் கதவுகள் திறந்து மூடுகின்றன. அறைக்குள் இருக்கும் விளக்கு அணைகிறது.

அப்பொழுது தான் கண்களை மூடிய பிக்கு, "ஐய்யோ.. விளக்கு அணைஞ்சிடுச்சே!!" என்கிறான்.

அருகில் அமர்ந்திருக்கும் பிக்கு, "ஏன் நீ பேசின!?" என்று கண்டிக்கிறான்.

"நாம இப்படிப் பேசக் கூடாது!!" என்று சொல்லி விட்டு, பேசியதற்காக திடுக்கிடுகிறான் சின் மோம்.

"ஹாஹாஹா.. நான் மட்டும் தான் பேசலை" என்று உற்சாகமாக சொல்கிறான் தூங்கியவன் முன் அமர்ந்திருந்த தூக்கக் கலக்க பிக்கு. மூவரும் அவனை முறைக்கின்றனர். (படத்தில் இடம்பெறும் இந்தக் காட்சி அடிக்கடி கையாளப்படும் ஜென் கதை).

போதி தர்மர் வழவழப்பான கல் ஒன்றை மேசை மீது தேய்த்துக் கொண்டிருக்கிறார்.

"நீங்கள் என்னச் செய்கிறீர்கள்?" என்று கேட்கிறான் பிக்கு ஒருவன்.

"நீங்கள் என்னச் செய்கிறீர்கள்?!" என்று போதி தர்மரும் அதே கேள்வியைக் கேட்கிறார்.

"நாங்கள் புத்தராக தியானம் பண்றோம்" என்கிறான் தூக்க கலக்க பிக்கு.

"நான் இக்கல்லை உரசி, பளபளப்பான கல்லாக மாற்ற முயல்கிறேன்."

"எப்படி கல்லை உரசினால் கண்ணாடி ஆகும்!?" எனப் புன்னகைக்கிறான் சின் மோன்.

"கல்லில் இருந்து கண்ணாடி வராதெனில்.. நீங்கள் மட்டும் எப்படித் தியானத்தில் அமர்ந்து புத்தர் ஆவீர்கள்!?"

"புத்தர் ஆக நாங்க என்னச் செய்யணும்?"

"முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள். புத்தர் என எதுவும் இல்லை.வெறுமென அமர்ந்து அதன் விளைவுகளைப் பற்றி அறியாமல் இருந்தால்.. அகஒளிக்கான பாதையை அடையவே மாட்டீர்கள்" என்கிறார் போதி தர்மர்.

"அக ஒளிக்கான பாதையை அடைய என்னச் செய்யணும்?"

"முதலில் இருந்து தொடங்குங்கள்."

"எது முதல் (தொடக்கம்)?"

"மனம் தான் தொடக்கம்" என இடைவெளி விட்டு, "அனைத்து நன்மை, தீமை மற்றும்சரி, தவறு மனதிலிருந்தே கிளை விடுகின்றன. இதைப் புரிந்துக் கொள்ளாவிடில்..உங்க முயற்சிகள் எல்லாம் பாழே!!" என்று எழுந்து சென்று விடுகிறார். அவரைமேலும் கேள்விகள் கேட்க முயலுகின்றனர் பிக்குகள்.

இந்தப் பிக்குகளிடம் கொஞ்சம் அதிகமாகவே போதி தர்மர் பேசி விட்டதாக தோன்றுகிறது. போதி தர்மர் போதி தாராவாக இருந்த பொழுது அவருக்கு இத்தகைய வாய்ப்பை அவர் குரு ப்ரஜ்ன தாரா அளிக்கவே இல்லை.
'மனம் தான் அந்தக் குடில்!!' என ஆய்ந்தறிந்தே
போதி தர்மர் உணர்ந்தார். பொதுவில் நீங்கள் எந்த ஜென் குருவிடம் சென்று புத்தர் (கடவுள்) பற்றிக் கேள்விஎழுப்பினால்.. அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

4/25/2012

மகான்கள் வாழ்வில் – ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்




பொதுவாக மகான்கள் செய்யும் காரியங்கள் பலவற்றிற்கும் நமக்கு முதலில் அர்த்தம் புரியாது. பைத்தியக்காரத்தனமாகத் தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் பின்னர் உண்மை புலப்படும்.
அவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்து பக்தர்களின் கர்ம வினையைத் தாம் ஏற்று, அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த மகான்களுள் மிக முக்கியமானவர் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். ‘தங்கக்கைச் சாமி’ என்றும் ‘கிறுக்குச் சாமி’ என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டவர். பலரது வாழ்க்கை உயர்விற்குக் காரணமாக அமைந்தவர். ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலையையைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்.
ஒருமுறை, தெருவில் சவ ஊர்வலம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதனைப் பின் தொடர்ந்து சேஷாத்ரி சுவாமிகள் சென்று கொண்டிருந்தார். அருகே ஓர் மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார் சுவாமிகள். பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. சாவு வீட்டில் இருந்து, அதுவும் குளிக்காமல் தீட்டுடன் திருமண வீட்டிற்குள் நுழைந்து விட்டாரே என சிலர் கோபமுற்றனர். சிலர் திட்டினர். சிலரோ, சுவாமிகள் வந்தது நிச்சயம் நல்லதற்குத் தான் என நினைத்தவாறு அமைதியாக இருந்தனர்.
மகான் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. நேரே சமையல் அறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய அண்டாவில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. வேகமாகச் சென்றவர் அப்படியே அதைச் சாய்த்துக் கீழே கொட்டிவிட்டு, வேகமாக வெளியே ஓடிச் சென்று விட்டார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி, ஆத்திரம். சிலர் திட்டிக் கொண்டே மகானைப் பிடிக்கப் பின்னால் வேகமாக ஓடினர். பயனில்லை. மகான் எங்கேயோ போய் விட்டிருந்தார்.
மகானின் இந்தச் செய்கைக்குக் காரணம் புரியாமல், கீழே கொட்டிக் கிடந்த சாம்பாரைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி போய் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. மகானை இரு கை கூப்பி வணங்கினர்.
காரணம், சாம்பாரில் ஒரு பெரிய நல்ல பாம்பு செத்துக் கிடந்தது. இதனை மகான் முன்கூட்டியே உணர்ந்து, சாம்பாரை யாரும் உண்டுவிடக் கூடாது, அதனால் ஆபத்தோ, உயிரிழப்போ நேர்ந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அண்டாவைக் கவிழ்த்தார் என்பதறிந்து அவரைத் தொழுதனர்.
மகான்களின் பெருமை சொல்லவும் அரிதே!
-Partha.

3/26/2012

ஜென் கதைகள்

                                                        


ஜென் கதைகளில் கூரப்படும் ஒவ்வரு கருத்துகளும் மிக ஆழமாக உணரக்கூடிய கருத்துகள் ஆகும். வாழ்கையில் எந்த ஒருகட்டதிலும் அவைகள் நமக்கு ஒரு தீர்வை தரக்குடியவையாகும். ஜென் துறவிகளின் கதைகளில் நகைச்சுவைக்கும் ஒரு தனி இடமுண்டு


  • ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார் அவர் எப்போதும் சிரித்துகொண்டே இருபதோடு மற்றவர்களையும் சிரிக்கவைதுக்கொண்டிறுப்பார். மக்களும் அவர் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள். ஒரு நாள் அவர் மரணப்படுக்கையில் இருந்தார் மக்கள் அவரை சுற்றி நின்று அழுதவண்ணம் இருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு சீடனை அழைத்து. தன் சிதைக்கு தீ மூட்டும்முன் தன்னுடைய உடம்பை நீரில் நனைத்து விட வேண்டாம் என்று கூரிவிட்டு இறந்துவிட்டார் மக்களும் சீடர்களும் அழுதபடியே அவரது சிதைக்கு நெருப்பு மூட்டினர் அப்போது அவரது உடம்பிலிருந்து மறைத்து வைக்கபட்டிருந்த பட்டாசுகளும், வானவேடிக்கைகளும் வெடித்தது சோகமாய் இருந்த மக்கள் சிரித்து விட்டார்கள். இறந்த பின்னும் மக்களை சிரிக்க வைத்ததால் அவருக்கு சிரிப்பு புத்தர் என்றே அழைக்க ஆறாம்பிதுவிட்டார்கள்.
*********************************************************************************
 
ஒரு முறை ஒரு புத்த துறவி கடற்கரையில் அமர்ந்து கண் மூடி மந்திரம் சொல்லிகொண்டிருந்தார்.அப்போது அவர் மீது பல பறவைகள் வந்து அமர்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தது. அதை பார்த்த சிறுவன் அந்த துறவியிடம் எப்படி பறவைகள் உங்கள் மீது வந்து பயமில்லாமல் அமர்கின்றன என்று கேட்டான் அதற்கு அந்த துறவி நான் அந்த பறவைகளை துன்புறுத்தவில்லை அதனால் அவைகள் என்மீது அமர்கின்றன என்றார். அப்போது அந்த சிறுவன் எனக்கு ஒரு பறவையை நாளை பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அதற்கு அந்த துறவி சரி என்று ஒப்புக்கொண்டார். அடுத்தநாள் அந்த துறவி மனதில் நிம்மதியற்றுபோய் அந்த பறவையை சிறைபிடிக்க நினைத்தார் எப்போதும் அவர்மீது வந்து அமரும் பறவைகள் ஒன்று கூட அவர் பக்கத்தில் அமரவில்லை. அந்த துறவி அந்த பறவைகளை சிறைபிடிக்கும் நினைப்பு அந்த பறவைகளுக்குள் எழுந்து எந்த பறவையும் வந்து அமரவில்லை. பிறகு தான் செய்த,செய்ய நினைத்த தவறை நினைது வருந்தினார் அந்த துறவி.
 
-Partha.

3/15/2012

ஜென்

                                                                 Meditation : Flower Emblem with Pedals on Gold
ஜென் தத்துவங்கள். . .
காலம்
யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

மதம்
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

தேடுதல்
கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே.

சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல். சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

அறியாமைஅறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.
நான்'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது அங்கே 'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.
மௌனம்மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.
காலம்காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.
-Partha.

சென் கதைகள்

                                                                        Meditation : Beautiful Buddha image in Thailand, a white background

ஒரு ஊரில் இரு சென் வழிபாட்டிடங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மிகப் பெரியது. அதில் நந்தவனம் ஒன்றும் இருந்தது. அவ்விரு வழிபாட்டிடங்களின் நடுவே சிறிய சுவர் மட்டுமே இருந்தது.
நந்தவனத்தை ஒருவர் பராமரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு பெரிய துறவி வருகின்றார் என்பதால் நந்தவனம் முழுமையும் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்தார். செடிகளை வெட்டி அழகு படுத்தினார். காய்ந்த மற்றும் பழுத்த இலைகளையெல்லாம் அங்கிருந்து அப்புறப் படுத்தினார். நந்தவனம் பிரகாசமாய் இருந்தது.
இவர் செய்யும் பணிகள் அத்தனையையும் சுவருக்கு அப்பால் இருந்து அந்த ஆலயத்தில் இருந்த ஒரு வயது முதிர்ந்த சென் துறவி பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவரைக் கவனித்த நந்தவன தோட்டக்காரர், ‘ஐயா, இப்போது நந்தவனம் எத்தனை அழகாக இருக்கின்றது பார்த்தீர்களா?’ என்றார்.
துறவியோ, ‘ம்ம். . . ஒன்றே ஒன்று மட்டும் குறைபாடாக இருக்கின்றது. என்னை இந்தச் சுவரைத் தாண்டி வருவதற்குக் கை கொடுத்தால் அதைச் சரி செய்து விடுவேன். அப்புறம் மிக அருமையாக இருக்கும்.’ என்றார்.
வயது முதிர்ந்த ஜென் துறவியை சுவரேற்றிக் கீழே இறங்க உதவி செய்தார் தோட்டக்காரர்.
உள்ளே நுழைந்த துறவி ஒரு மரத்தின் அருகில் சென்று அதைப் பலம் கொண்ட மட்டும் பிடித்து ஆட்டினார். அப்போது சில இலைகள் இயற்கையாய்க் கீழே விழுந்தன.
‘அவ்வளவு தான்! இப்போது தான் அருமையாக இருக்கின்றது’ என்றார் துறவி.
-Partha.

ஜென் கதை

                                                                Meditation : meditation at sunset illustration


ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்.. எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்.. " அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்.. " இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது.. அப்போதும் அதே அறிவுரை..

போட்டி நாள் அருகில் வந்து விட்டது.. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், " நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.. "போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...

மல்ல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்... டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.. இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்.. போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..

*******************************************************************************

ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற வேண்டி ஒருவன் வந்தான்.
'ஐயா! நான் ஞானோதயம் பெற விரும்புகிறேன். அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?"
"எப்படியும் பத்து வருடங்கள் ஆகும்" என்றார் குரு. 'என்ன பத்து ஆண்டுகளா?' அதிர்ச்சியில் கேட்டான் அவன்.
'தோராயமாகச் சொன்னேன். சரியாகச் சொன்னால் இருபது வருடங்கள் ஆகும்'
'என்ன? இரட்டிப்பாகச் சொல்கிaர்களே' கோபப்பட்டான் அவன்.
'இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டால் முப்பது வருடங்கள் ஆகும்' என்றார் குரு.
'ஞானம் என்பது சென்றடையும் ஓர் இடமோ, முயன்று கைப்பற்றும் ஓர் இலக்கோ அல்ல. அது பயணம். வெறும் பயணம்தான். வேகமான பயணம். வழியிலுள்ள காட்சிகள் எதையும் காணவிடாது. வெகுசீக்கிரம் எதையும் கற்க வேண்டும் என்று எண்ணும் போது எதையுமே சரிவர அறிய முடியாது போகும். சிறியதிலி ருந்துதான் பெரியது உண்டாகும் மெளனத்திலிருந்துதான் ஓசை உண்டா கும். இதை உணர்வதுதான் ஞானம்' என்கிறது இந்த ஜென் கதை.

-Partha.

2/13/2012

ஆன்மாவை பிரகாசப்படுத்து - ஜென்

சுவாமி விவேகானந்தர் ஒரு நாள் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அருகே சில இளைஞர்கள் ஆற்று நீரில் மிதந்து சென்ற முட்டை ஒடுகளை சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்களில் ஒருவராலும் முட்டை ஓடுகளை குறிபார்த்து சுட முடியவில்லை.
அவர்களை புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் விவேகானந்தர். அவரின் சிரிப்பை கண்ட இளைஞர்கள் அவரிடம், கேலியாக பார்க்கிறீர்களே உங்களால் சுட முடியுமா? என்று சவால்விட்டனர்.
முயற்சி செய்கிறேன் என்றார் விவேகானந்தர் அடக்கமாக.. நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபமான காரியல் இல்லை என்றனர் இளைஞர்கள்.
விவேகானந்தர் அவர்களிடமிருந்து துப்பாக்கியை வாங்கினார். ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு ஒவ்வொன்றாக 12 முட்டை ஓடுகளை சுட்டார். ஒரு முறை கூட அவரது குறி தவறவில்லை. இளைஞர்களுக்கு ஒரே வியப்பு. உங்களால் இது எப்படி முடிந்தது என்று கேட்டனர்.
விவேகானந்தர் பதிலளித்தார், நான் இப்போதுதான் முதல் தடவையாக துப்பாக்கியை கையில் எடுத்துள்ளேன். எதைச் செய்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும். அப்படி செய்தால் எதையும் சாதிக்கலாம். ஒன்றை செய்யும்போது இன்னொன்றை நினைக்கக் கூடாது என்றார்.
நாமும் வெற்றி பெற மனதை ஒருமுகப்படுத்துவோம்.

*******************************************************************************
ஒரு குரு தம் சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்
‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்’
‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை’
‘இது ஏன்’ என்று குரு வினவினார்
சீடர்கள் பலவாறு தம் கற்பனைகளை விடையாக கூறினர்
‘ ஒரு வேளை ஒருவன் குடை கொண்டு சென்றிருக்கலாம்’
‘ஒரு வேளை ஒருவன் சாலையோரமாக் உள்ள நிழற்குடையில் நடந்து சென்றிருக்கலாம்’
பலவாறு விடைகள் வந்தன
எதுவும் குருவை திருப்திப்படுத்தவில்லை
‘நீங்கள் அனைவரும் வெறும் வார்த்தைகளைக் கேட்டு விடை மொழிகிறீர்கள்’
‘ஒருவரும் சரியான விடை கூறபோவதில்லை’ என்றார்.
சீடர்கள் யாரும் சரியான பதில் கூறவில்லை.
குரு சொன்ன பதில் :
ஒருவர் மட்டும் நனையவில்லை, இருவருமே நனைந்தனர் என்பது தான் விடை.
வெறும் வார்த்தையை மட்டும் வைத்துப் பார்த்தால் ஒருவர் நனையவில்லை மற்றவர் நனைந்தார் என்று பொருள் கொள்வோம். அதன் உட்பொருள் அறிந்தால் விடை விளங்கும்.
**********************************************************************************************
ஒரு 200 பேர் இருக்கற ரூம்ல ஒருத்தர் (அவங்களுக்கு செமினார் எடுக்க வந்தவர்) பேச ஆரம்பிச்சார். ஒரு புது ருபாய் தாளை எடுத்து அவரது கையில் உயர்த்தி பிடித்தவாறு இது யாருக்கு வேணும்னு கேட்டார். அனைவரும் அவர்களது கைகளை உயர்த்தினர்.

பின்பு அவர் அந்த தாளை கசக்கி சுருட்டி பின்பு மீண்டும் அதையே கேட்டார். ஒரு கை குட கீழே போகவில்லை.

பின்பும் அவர் அந்த தாளை கசக்கி கீழே போட்டு செருப்பால் மெத்து நசுக்கி கிட்ட தட்ட ஒட்டு போட்ட ருபாய் தாள் போல் மாற்றி விட்டு பின்பு மீண்டும் அதையே கேட்டார். ஒரு கை குட கீழே போகவில்லை.

அப்போது அவர்

நண்பர்களே இந்த நிமிடம் நீங்கள் ஒரு அற்புதமான பாடத்தை கற்று கொண்டு இருப்பிர்கள். நான் இந்த ருபாய் தாளை என்ன செய்தலும் சரி உங்களில் ஒருவரது கை குட கீழே இறங்கப்போவதில்லை, காரணம் அந்த ரூபாயின் மதிப்பு குறைவதில்லை இல்லை. அது அழுக்கனாலும் அதன் மதிப்பு குறையாது.

வாழ்க்கையில் பல முறை நாம் கீழே விழுவோம், மனதால் ஒடிந்து நோருங்குவோம், நாம் எடுக்கும் முடிவுகளால் சாக்கடையில் தள்ள படுவோம். நாமே நம்மை எதற்கும் ப்ர்யோஜனமட்ட்றவர் என எண்ணுவோம்.

ஆனால் நண்பா, எத்து நடந்தாலும் நாம் நம் மதிப்பை இழக்க போவதே இல்லை, நீ ஒடிந்து நொறுங்கி குப்பையில் எரியாப்பட்டலும் உன்னை உண்மையாய் நேசிப்பவர்களுக்கு நீ என்றுமே விலைமதிப்பில்லா மாணிக்கம் தான். நம் வாழ்வின் மதிப்பு நாம் என்ன செய்கிறோம் என்பதால் வருவதல்ல, நாம் யார் என்பதால் மட்டுமே. நீ தனித்தன்மை வாய்ந்தவன் என்பதை என்றும் மறவாதே.
-Partha.
.

1/03/2012

ஜென் தத்துவங்கள்

கோபத்தைக் களைவது எப்படி?
லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.
-Partha.

ஜென் தத்துவம் - ஓர் எளிய அறிமுகம்.

ஜென் எனபது ஒரு மதமல்ல. அதில் சடங்குகளோ, வழிபாடுகளோ ஏதுமில்லை. கடினமான தத்துவ விளக்கங்கள் ஏதும் ஜென்னில் கிடையாது. இதுதான் இறைவன் என்றோ இதுதான் இறைவனை அடையும் வழிஎன்றோ ஜென் குறிப்படுவதில்லை. பொதுவாக புத்தமத கருத்துகளை ஜென் என நினைப்பார் உண்டு. ஆனால் அப்படியல்ல. ஜென் தத்துவங்களில் புத்தரும் ஒரு ஜென் துறவியாக வருகிறார். ஜென் தத்துவத்தின் சாராம்சம் இதுதான் : " நீ நீயாக இரு.......இயல்பாக இரு...... அந்தந்த கணங்களில் உணர்ந்து வாழு.....கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை. யாருக்கும் கெடுதல் செய்யாதே, நினைக்காதே.....எளிமையாக இரு. நான் என்ற முனைப்பை விட்டு உலக காரியங்களை செய்து வா. இயல்பாக, அமைதியாக, நிதானமாக இருப்பதே இறையுணர்வு. இதற்கென தனியாக இறைவனை துதிபாடுவது கூட வீண்வேலை. எதிர்பார்ப்பின்றி காரியங்களை ஆற்றி வா. எதிர்பாராமல் இருப்பதால் நடப்பது நடக்காமல் போகாது - இவைகளே ஜென் தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும். உள்ளுணர்வால் வழிகாட்டப்பட்டு அது எதை செய்ய சொல்கிறதோ அதை இயல்பாக செய் என்கிறது ஜென். ஜென் துறவிகள் என்பவர்கள் எதையும் குறிப்பாக போதனை செய்ய மாட்டார்கள். சிறுசிறு கதைகள் மூலமாக, தங்களின் செயல்களின் மூலமாக - மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை, பிரபஞ்ச ரகசியங்களை விளங்க வைத்துவிடுவார்கள். ஜென் கதைகளை படித்தால் மனம் மிக லேசாகிவிடும். வாழ்க்கையின் சலிப்பான தருணங்களில், கஷ்டமான நேரங்களில் ஜென் கதைகள் மிகுந்த ஆறுதல் அளிப்பவையாகும். அமைதி, எளிமை, உண்மை, நேர்மை இவையே ஜென்ன்னின் சிறப்பு அம்சங்களாகும்.
 
ஒரு சிறிய ஜென் தத்துவத்துடன் இக்குறுங்கட்டுரையை முடிக்கிறேன்.
 
பசித்தால் சாப்பிடு...
தூக்கம் வந்தால் தூங்கு....
 
- Partha.

ஜென் தத்துவங்கள். . .

காலம்யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

மதம்
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

தேடுதல்
கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே.

சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல். சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

அறியாமைஅறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.
நான்'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது அங்கே 'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.
மௌனம்மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.
காலம்காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.          
 -Partha.

1/02/2012

ஞானக் கதைகள் - புத்தர்

துறவி ஒருவரை ஒருவன் பார்க்க சென்றான்.அவரிடம் தன நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்க அனுமதி கேட்டான்.அவரும் சம்மதிக்கவே அவன் கேட்டான்,''எப்போதும்நீங்கள்சிரித்தமுகத்துடனஇருக்கிறீர்கள்.கோபம் கொள்வதே இல்லை.நீங்கள் பொறாமைப்பட்டு யாரும் பார்த்ததில்லை.என் சந்தேகம் என்னவென்றால்,நீங்கள் நடிக்கிறீர்களா?உண்மையில் இப்படி இருக்க முடியுமா?''துறவி சொன்னார்,''அது இருக்கட்டும்.இப்போது உன் கைரேகையைப் பார்த்தேன்.இன்னும் ஏழு நாட்கள்தான் நீ உயிருடன் இருப்பாய்.ஏழாவது நாள் சூரியன் மறையும்போது நீ மரணமடைவாய்,''அவன் பதட்டத்துடன் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.வீட்டில் போய் உடனே படுத்துக் கொண்டான்.குடும்பத்தார் என்னவென்று விசாரிக்க நடந்ததை சொன்னான்.எல்லோரும் அழ ஆரம்பித்தனர்.சாவு நெருங்கிக் கொண்டிருந்தது.எதுவும் இனி செய்ய முடியாது என்ற தெளிவான முடிவுக்கு அவன் வந்ததும்,அவனுக்குள் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது.
அவன் யோசித்தான்,''துறவி தினமும் தியானம் செய்ய சொல்வாரே.நாம்கூட,இப்போது என்ன அவசரம்,வயதான காலத்தில் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்தோம்.பல ஆண்டுகள் தள்ளிப் போட்டதை ஏன் இப்போது ஆரம்பிக்கக்கூடாது ?''இரண்டு தினங்களில் முழுமையான மௌனத்தில் ஆழ்ந்து விட்டான்.நான்காவது நாள்,அவன் முகம் அழகாக ,கருணை ததும்ப ஒரு ஞானி போலக் காட்சி அளித்தது.ஏழாவது நாள் வந்தது.சூரியன் மறையும் நேரமும் வந்தது குடும்பத்தினர் யாரையும் கவலைப்படக்கூடாது என்று கூறிவிட்டான்.அந்தத் தருணத்தில் துறவி அங்கு வந்தார்.அவனைக் காப்பாற்ற முடியுமா எனக் குடும்பத்தினர் துறவியிடம் கேட்டனர்.துறவி அவனிடம் சொன்னார்,''நீ சாக மாட்டாய்.இன்னும் உனக்கு நீண்ட ஆயுள் உள்ளது.நீ கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க எனக்குத் தெரிந்த வழிஇதுதான்.நான் உன்னிடம் என்னதான் சொல்லியிருந்தாலும் உன் சந்தேகம் தீர்ந்திருக்காது.எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்ற அனுபவத்தை உனக்குக் கொடுக்க விரும்பினேன்.இந்த ஏழு நாட்களும் உனக்கு அந்த அனுபவத்தைத் தந்து விட்டது.உனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது அல்லவா?''அவன் உடனே படுக்கையிலிருந்து கீழே குதித்துதுறவியின் பாதத்தைத் தொட்டு வணங்கினான்.

***************************************************************************

சூபி ஞானி அல்பயாஜித் தனது தவ பலத்தினால் நேரடியாக சொர்க்கம் போனார்.சொர்க்கத்தின் வாயிலில் எண்ணற்ற தேவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தினர்.அவர் ஆவலுடன் ''இறைவன் எங்கே?''என்று கேட்டார்.அவர்கள் வியப்புடன் கேட்டனர்,''என்ன,அவர் பூமியில் இல்லையா?''

********************************************************************************

- Partha.