3/26/2012

ஜென் கதைகள்

                                                        


ஜென் கதைகளில் கூரப்படும் ஒவ்வரு கருத்துகளும் மிக ஆழமாக உணரக்கூடிய கருத்துகள் ஆகும். வாழ்கையில் எந்த ஒருகட்டதிலும் அவைகள் நமக்கு ஒரு தீர்வை தரக்குடியவையாகும். ஜென் துறவிகளின் கதைகளில் நகைச்சுவைக்கும் ஒரு தனி இடமுண்டு


  • ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார் அவர் எப்போதும் சிரித்துகொண்டே இருபதோடு மற்றவர்களையும் சிரிக்கவைதுக்கொண்டிறுப்பார். மக்களும் அவர் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள். ஒரு நாள் அவர் மரணப்படுக்கையில் இருந்தார் மக்கள் அவரை சுற்றி நின்று அழுதவண்ணம் இருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு சீடனை அழைத்து. தன் சிதைக்கு தீ மூட்டும்முன் தன்னுடைய உடம்பை நீரில் நனைத்து விட வேண்டாம் என்று கூரிவிட்டு இறந்துவிட்டார் மக்களும் சீடர்களும் அழுதபடியே அவரது சிதைக்கு நெருப்பு மூட்டினர் அப்போது அவரது உடம்பிலிருந்து மறைத்து வைக்கபட்டிருந்த பட்டாசுகளும், வானவேடிக்கைகளும் வெடித்தது சோகமாய் இருந்த மக்கள் சிரித்து விட்டார்கள். இறந்த பின்னும் மக்களை சிரிக்க வைத்ததால் அவருக்கு சிரிப்பு புத்தர் என்றே அழைக்க ஆறாம்பிதுவிட்டார்கள்.
*********************************************************************************
 
ஒரு முறை ஒரு புத்த துறவி கடற்கரையில் அமர்ந்து கண் மூடி மந்திரம் சொல்லிகொண்டிருந்தார்.அப்போது அவர் மீது பல பறவைகள் வந்து அமர்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தது. அதை பார்த்த சிறுவன் அந்த துறவியிடம் எப்படி பறவைகள் உங்கள் மீது வந்து பயமில்லாமல் அமர்கின்றன என்று கேட்டான் அதற்கு அந்த துறவி நான் அந்த பறவைகளை துன்புறுத்தவில்லை அதனால் அவைகள் என்மீது அமர்கின்றன என்றார். அப்போது அந்த சிறுவன் எனக்கு ஒரு பறவையை நாளை பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அதற்கு அந்த துறவி சரி என்று ஒப்புக்கொண்டார். அடுத்தநாள் அந்த துறவி மனதில் நிம்மதியற்றுபோய் அந்த பறவையை சிறைபிடிக்க நினைத்தார் எப்போதும் அவர்மீது வந்து அமரும் பறவைகள் ஒன்று கூட அவர் பக்கத்தில் அமரவில்லை. அந்த துறவி அந்த பறவைகளை சிறைபிடிக்கும் நினைப்பு அந்த பறவைகளுக்குள் எழுந்து எந்த பறவையும் வந்து அமரவில்லை. பிறகு தான் செய்த,செய்ய நினைத்த தவறை நினைது வருந்தினார் அந்த துறவி.
 
-Partha.

3/15/2012

ஜென்

                                                                 Meditation : Flower Emblem with Pedals on Gold
ஜென் தத்துவங்கள். . .
காலம்
யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

மதம்
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

தேடுதல்
கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே.

சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல். சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

அறியாமைஅறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.
நான்'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது அங்கே 'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.
மௌனம்மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.
காலம்காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.
-Partha.

சென் கதைகள்

                                                                        Meditation : Beautiful Buddha image in Thailand, a white background

ஒரு ஊரில் இரு சென் வழிபாட்டிடங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மிகப் பெரியது. அதில் நந்தவனம் ஒன்றும் இருந்தது. அவ்விரு வழிபாட்டிடங்களின் நடுவே சிறிய சுவர் மட்டுமே இருந்தது.
நந்தவனத்தை ஒருவர் பராமரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு பெரிய துறவி வருகின்றார் என்பதால் நந்தவனம் முழுமையும் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்தார். செடிகளை வெட்டி அழகு படுத்தினார். காய்ந்த மற்றும் பழுத்த இலைகளையெல்லாம் அங்கிருந்து அப்புறப் படுத்தினார். நந்தவனம் பிரகாசமாய் இருந்தது.
இவர் செய்யும் பணிகள் அத்தனையையும் சுவருக்கு அப்பால் இருந்து அந்த ஆலயத்தில் இருந்த ஒரு வயது முதிர்ந்த சென் துறவி பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவரைக் கவனித்த நந்தவன தோட்டக்காரர், ‘ஐயா, இப்போது நந்தவனம் எத்தனை அழகாக இருக்கின்றது பார்த்தீர்களா?’ என்றார்.
துறவியோ, ‘ம்ம். . . ஒன்றே ஒன்று மட்டும் குறைபாடாக இருக்கின்றது. என்னை இந்தச் சுவரைத் தாண்டி வருவதற்குக் கை கொடுத்தால் அதைச் சரி செய்து விடுவேன். அப்புறம் மிக அருமையாக இருக்கும்.’ என்றார்.
வயது முதிர்ந்த ஜென் துறவியை சுவரேற்றிக் கீழே இறங்க உதவி செய்தார் தோட்டக்காரர்.
உள்ளே நுழைந்த துறவி ஒரு மரத்தின் அருகில் சென்று அதைப் பலம் கொண்ட மட்டும் பிடித்து ஆட்டினார். அப்போது சில இலைகள் இயற்கையாய்க் கீழே விழுந்தன.
‘அவ்வளவு தான்! இப்போது தான் அருமையாக இருக்கின்றது’ என்றார் துறவி.
-Partha.

ஜென் கதை

                                                                Meditation : meditation at sunset illustration


ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்.. எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்.. " அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்.. " இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது.. அப்போதும் அதே அறிவுரை..

போட்டி நாள் அருகில் வந்து விட்டது.. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், " நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.. "போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...

மல்ல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்... டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.. இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்.. போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..

*******************************************************************************

ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற வேண்டி ஒருவன் வந்தான்.
'ஐயா! நான் ஞானோதயம் பெற விரும்புகிறேன். அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?"
"எப்படியும் பத்து வருடங்கள் ஆகும்" என்றார் குரு. 'என்ன பத்து ஆண்டுகளா?' அதிர்ச்சியில் கேட்டான் அவன்.
'தோராயமாகச் சொன்னேன். சரியாகச் சொன்னால் இருபது வருடங்கள் ஆகும்'
'என்ன? இரட்டிப்பாகச் சொல்கிaர்களே' கோபப்பட்டான் அவன்.
'இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டால் முப்பது வருடங்கள் ஆகும்' என்றார் குரு.
'ஞானம் என்பது சென்றடையும் ஓர் இடமோ, முயன்று கைப்பற்றும் ஓர் இலக்கோ அல்ல. அது பயணம். வெறும் பயணம்தான். வேகமான பயணம். வழியிலுள்ள காட்சிகள் எதையும் காணவிடாது. வெகுசீக்கிரம் எதையும் கற்க வேண்டும் என்று எண்ணும் போது எதையுமே சரிவர அறிய முடியாது போகும். சிறியதிலி ருந்துதான் பெரியது உண்டாகும் மெளனத்திலிருந்துதான் ஓசை உண்டா கும். இதை உணர்வதுதான் ஞானம்' என்கிறது இந்த ஜென் கதை.

-Partha.