2/13/2012

ஆன்மாவை பிரகாசப்படுத்து - ஜென்

சுவாமி விவேகானந்தர் ஒரு நாள் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அருகே சில இளைஞர்கள் ஆற்று நீரில் மிதந்து சென்ற முட்டை ஒடுகளை சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்களில் ஒருவராலும் முட்டை ஓடுகளை குறிபார்த்து சுட முடியவில்லை.
அவர்களை புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் விவேகானந்தர். அவரின் சிரிப்பை கண்ட இளைஞர்கள் அவரிடம், கேலியாக பார்க்கிறீர்களே உங்களால் சுட முடியுமா? என்று சவால்விட்டனர்.
முயற்சி செய்கிறேன் என்றார் விவேகானந்தர் அடக்கமாக.. நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபமான காரியல் இல்லை என்றனர் இளைஞர்கள்.
விவேகானந்தர் அவர்களிடமிருந்து துப்பாக்கியை வாங்கினார். ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு ஒவ்வொன்றாக 12 முட்டை ஓடுகளை சுட்டார். ஒரு முறை கூட அவரது குறி தவறவில்லை. இளைஞர்களுக்கு ஒரே வியப்பு. உங்களால் இது எப்படி முடிந்தது என்று கேட்டனர்.
விவேகானந்தர் பதிலளித்தார், நான் இப்போதுதான் முதல் தடவையாக துப்பாக்கியை கையில் எடுத்துள்ளேன். எதைச் செய்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும். அப்படி செய்தால் எதையும் சாதிக்கலாம். ஒன்றை செய்யும்போது இன்னொன்றை நினைக்கக் கூடாது என்றார்.
நாமும் வெற்றி பெற மனதை ஒருமுகப்படுத்துவோம்.

*******************************************************************************
ஒரு குரு தம் சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்
‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்’
‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை’
‘இது ஏன்’ என்று குரு வினவினார்
சீடர்கள் பலவாறு தம் கற்பனைகளை விடையாக கூறினர்
‘ ஒரு வேளை ஒருவன் குடை கொண்டு சென்றிருக்கலாம்’
‘ஒரு வேளை ஒருவன் சாலையோரமாக் உள்ள நிழற்குடையில் நடந்து சென்றிருக்கலாம்’
பலவாறு விடைகள் வந்தன
எதுவும் குருவை திருப்திப்படுத்தவில்லை
‘நீங்கள் அனைவரும் வெறும் வார்த்தைகளைக் கேட்டு விடை மொழிகிறீர்கள்’
‘ஒருவரும் சரியான விடை கூறபோவதில்லை’ என்றார்.
சீடர்கள் யாரும் சரியான பதில் கூறவில்லை.
குரு சொன்ன பதில் :
ஒருவர் மட்டும் நனையவில்லை, இருவருமே நனைந்தனர் என்பது தான் விடை.
வெறும் வார்த்தையை மட்டும் வைத்துப் பார்த்தால் ஒருவர் நனையவில்லை மற்றவர் நனைந்தார் என்று பொருள் கொள்வோம். அதன் உட்பொருள் அறிந்தால் விடை விளங்கும்.
**********************************************************************************************
ஒரு 200 பேர் இருக்கற ரூம்ல ஒருத்தர் (அவங்களுக்கு செமினார் எடுக்க வந்தவர்) பேச ஆரம்பிச்சார். ஒரு புது ருபாய் தாளை எடுத்து அவரது கையில் உயர்த்தி பிடித்தவாறு இது யாருக்கு வேணும்னு கேட்டார். அனைவரும் அவர்களது கைகளை உயர்த்தினர்.

பின்பு அவர் அந்த தாளை கசக்கி சுருட்டி பின்பு மீண்டும் அதையே கேட்டார். ஒரு கை குட கீழே போகவில்லை.

பின்பும் அவர் அந்த தாளை கசக்கி கீழே போட்டு செருப்பால் மெத்து நசுக்கி கிட்ட தட்ட ஒட்டு போட்ட ருபாய் தாள் போல் மாற்றி விட்டு பின்பு மீண்டும் அதையே கேட்டார். ஒரு கை குட கீழே போகவில்லை.

அப்போது அவர்

நண்பர்களே இந்த நிமிடம் நீங்கள் ஒரு அற்புதமான பாடத்தை கற்று கொண்டு இருப்பிர்கள். நான் இந்த ருபாய் தாளை என்ன செய்தலும் சரி உங்களில் ஒருவரது கை குட கீழே இறங்கப்போவதில்லை, காரணம் அந்த ரூபாயின் மதிப்பு குறைவதில்லை இல்லை. அது அழுக்கனாலும் அதன் மதிப்பு குறையாது.

வாழ்க்கையில் பல முறை நாம் கீழே விழுவோம், மனதால் ஒடிந்து நோருங்குவோம், நாம் எடுக்கும் முடிவுகளால் சாக்கடையில் தள்ள படுவோம். நாமே நம்மை எதற்கும் ப்ர்யோஜனமட்ட்றவர் என எண்ணுவோம்.

ஆனால் நண்பா, எத்து நடந்தாலும் நாம் நம் மதிப்பை இழக்க போவதே இல்லை, நீ ஒடிந்து நொறுங்கி குப்பையில் எரியாப்பட்டலும் உன்னை உண்மையாய் நேசிப்பவர்களுக்கு நீ என்றுமே விலைமதிப்பில்லா மாணிக்கம் தான். நம் வாழ்வின் மதிப்பு நாம் என்ன செய்கிறோம் என்பதால் வருவதல்ல, நாம் யார் என்பதால் மட்டுமே. நீ தனித்தன்மை வாய்ந்தவன் என்பதை என்றும் மறவாதே.
-Partha.
.