1/03/2012

ஜென் தத்துவம் - ஓர் எளிய அறிமுகம்.

ஜென் எனபது ஒரு மதமல்ல. அதில் சடங்குகளோ, வழிபாடுகளோ ஏதுமில்லை. கடினமான தத்துவ விளக்கங்கள் ஏதும் ஜென்னில் கிடையாது. இதுதான் இறைவன் என்றோ இதுதான் இறைவனை அடையும் வழிஎன்றோ ஜென் குறிப்படுவதில்லை. பொதுவாக புத்தமத கருத்துகளை ஜென் என நினைப்பார் உண்டு. ஆனால் அப்படியல்ல. ஜென் தத்துவங்களில் புத்தரும் ஒரு ஜென் துறவியாக வருகிறார். ஜென் தத்துவத்தின் சாராம்சம் இதுதான் : " நீ நீயாக இரு.......இயல்பாக இரு...... அந்தந்த கணங்களில் உணர்ந்து வாழு.....கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை. யாருக்கும் கெடுதல் செய்யாதே, நினைக்காதே.....எளிமையாக இரு. நான் என்ற முனைப்பை விட்டு உலக காரியங்களை செய்து வா. இயல்பாக, அமைதியாக, நிதானமாக இருப்பதே இறையுணர்வு. இதற்கென தனியாக இறைவனை துதிபாடுவது கூட வீண்வேலை. எதிர்பார்ப்பின்றி காரியங்களை ஆற்றி வா. எதிர்பாராமல் இருப்பதால் நடப்பது நடக்காமல் போகாது - இவைகளே ஜென் தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும். உள்ளுணர்வால் வழிகாட்டப்பட்டு அது எதை செய்ய சொல்கிறதோ அதை இயல்பாக செய் என்கிறது ஜென். ஜென் துறவிகள் என்பவர்கள் எதையும் குறிப்பாக போதனை செய்ய மாட்டார்கள். சிறுசிறு கதைகள் மூலமாக, தங்களின் செயல்களின் மூலமாக - மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை, பிரபஞ்ச ரகசியங்களை விளங்க வைத்துவிடுவார்கள். ஜென் கதைகளை படித்தால் மனம் மிக லேசாகிவிடும். வாழ்க்கையின் சலிப்பான தருணங்களில், கஷ்டமான நேரங்களில் ஜென் கதைகள் மிகுந்த ஆறுதல் அளிப்பவையாகும். அமைதி, எளிமை, உண்மை, நேர்மை இவையே ஜென்ன்னின் சிறப்பு அம்சங்களாகும்.
 
ஒரு சிறிய ஜென் தத்துவத்துடன் இக்குறுங்கட்டுரையை முடிக்கிறேன்.
 
பசித்தால் சாப்பிடு...
தூக்கம் வந்தால் தூங்கு....
 
- Partha.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக