9/30/2010

வெற்றியின் ரகசியம் ( sucess )

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார்.

கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார்.

அவன் வெளியே வர முயற்சி செய்தான்.

ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார்.

சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.

சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார்.

அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.

சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.

இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

தொகுப்பு :- Sarathi

9/28/2010

நவராத்திரி

ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம் தேவகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை இனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நவ என்ற சொல்லிற்கு ஒன்பது, புதியது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இங்கு ஒன்பது ராத்திரிகள் என்பதே நவராத்திரி எனபபபடுகிறது. ஒன்பது ராத்திரிகள் சக்தியை நோன்பு நோற்று வழிபட்டு 10ம் நாள் நோன்பை நிறைவு செய்ய வேண்டும். உத்தராயண காலமான தை முதல் ஆனி வரையிலான காலத்தின் நடுவில் வருவது வசந்த ருது -- சித்திரை, தட்சிணாயண காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான காலத்தின் நடுப்பகுதியான சரத் ருது -- புரட்டாசி. இவ்விரு பருவ காலங்களும் எமனின் கோரைப்பற்களைக் குறிக்கின்றன. இக்காலங்கள் பொதுவாக மனிதரிற்கு தீமை விளைவிக்கும் காலங்களாகும். இதனால் தான் இக் காலங்களில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான மலைமகள் (துர்க்கை), அலைமகள் (மகாலட்சுமி), கலைமகள் (சரசுவதி) ஆகியோரிற்கு மும்மூன்று நாடகளாக வழிபடும் ஒரு முறையும் உள்ளது. மற்றும் ஒன்பது சக்தியிரை ஒன்பது நாட்கள் வழிபடும் முறையம் உள்ளது. ஈழம் போன்ற நாடுகளில் முதல் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் மற்றும் படைவீரர்கள் ஒன்பது நாட்களும் தங்கள் ஆயுதங்களை (போர்க் கருவிகளை) பூசையில் வைத்து பத்தாம் நாள் விஜய தசமியன்று விழா எடுத்து தமது வெற்றிக்கு தமது ஆயுதங்களிற்கு சிறப்பு சக்தி கிடைக்க வேண்டும் என வழிபட்டு வந்தனர். இதற்கு சான்று கிருஷ்ண அவதாரத்தில் கம்சனின் படலத்தில் காணப்படுகிறது. நவராத்திரி கொலு வைக்கும் முறையையும், ஒன்புது தேவியரின் வழிபாட்டு முறையையும் இனிப்பார்ப்போம்
நவராத்திரி கொலு
                      நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.

    1. முதலாம் படி :-
                     ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர                       வர்கங்களின் பொம்மைகள்.
    2. இரண்டாம் படி:-
                     ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
    3. மூன்றாம் படி :-
                    மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.                                
    4. நாலாம்படி :-
                    நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு  போன்றவற்றின் பொம்மைகள்.
    5. ஐந்தாம்படி :-
                   ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
  
6. ஆறாம்படி :-
                   ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
   7. ஏழாம்படி :-
                   மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த    சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.    8. எட்டாம்படி :-
                  தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
  
9. ஒன்பதாம்படி :-
                   பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
 
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

                       
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள் :-
          
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
             முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள் :-
             இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
             இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
             மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை
அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
            மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.
4. நான்காம் நாள் :-
           
சக்தித்தாயை இன்று வை~;ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
         
  நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.5. ஐந்தாம் நாள் :-
           
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
           
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.6. ஆறாம் நாள் :-

           
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
        
ஐந்தாம் நாளநைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.7. ஏழாம் நாள் :-
        
ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.
           ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.8. எட்டாம் நாள் :-
          
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
        
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
          
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
         ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.
SARATHI, SAUDI ARABIA.

9/27/2010

365 நாளும் வாழ வழி

வருடத்தில் 365 நாளும் வாழ வழி (HOW TO LIVE 365 DAYS A YEAR) என்ற தனது புத்தகத்தில் பிரபல அறிஞர் ஜான் ஏ. ஷிண்ட்லர் "உணர்ச்சிகளால் தூண்டப்படும் நோய்களை அறவே விரட்ட வேண்டும்" என்று அறிவுரை பகர்கிறார்.

சீரான வாழ்க்கை அமைந்திருந்தால் அதைத் தொடர்ந்து அனுபவியுங்கள். கரடுமுரடான வாழ்க்கை நிலை ஏற்பட்டால் நான்கு வழிகளை மனதில் கொள்ளுங்கள் என்று கூறும் அவர் நான்கு வழிகளை முறைப்படுத்தி கூறுகிறார்.

1. முதலில் எவ்வளவு மோசமான நிலையாக இருந்தாலும் வெளிப்படையாக அமைதியுடன் இருங்கள். முடிந்தால் நகைச்சுவையுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள் (இடுக்கண் வருங்கால் நகுக)

2. சினிமா பிலிம் போல உங்களுக்கு நேர்ந்த அவல நிலையை திருப்பித் திருப்பி மனத்திரையில் ஓட்டிப் பார்க்காதீர்கள். தன்னிரக்கப்படவே கூடாது.

3. தோல்வியை எப்படி வெற்றியாக மாற்ற முடியும் என்று பாருங்கள். சமநிலை, தைரியம், மகிழ்ச்சி போன்ற பண்புகளால் உங்கள் தோல்வியை சமாளித்த நீங்கள் வெற்றி பெறும் நிலையை பார்த்து அனைவரும் வியப்படைவர்.

4. கீழ்க்கண்ட கொடிகளை உங்கள் மனம் என்னும் கோட்டையில் பறக்க விடுங்கள்.

சமநிலை: (அமைதியுடன் இருப்பேன்)

வருவது வரட்டும்: (இந்த தற்காலிக சரிவை ஏற்றுக் கொள்வேன்)

தைரியம்: (இது மட்டுமல்ல; இனிவரும் தோல்விக்கும் தயார்)

மலர்ச்சி: (இந்த தோல்வியை வெற்றியாக மாற்றியே தீருவேன்)

மகிழ்ச்சி: (இன்னும் நல்ல முறையில் எல்லா மனிதரையும் அணுகுவேன்)
  
நன்றி:- ச.நாகராஜன், Nilacharal.

நேர நிர்வாகம் (TIME MANAGEMENT)

குறித்த நேரத்தைக் கடைப்பிடித்தல்

குறித்த நேரத்தைக் கடைப்பிடித்தல் என்பது ஒரு அரிய தேவையான குணமாகும். அதுவும் இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் தகவல் பரிமாற்றங்கள் மின்னல் வேகத்தில் இண்டர்நெட் மூலமாகவும் பேக்ஸ் மூலமாகவும் பரவும் போது குறித்த நேரம் என்பது மிக்க அர்த்தம் உள்ளதாக ஆகிறது.

போட்டி மயமான உலகில் முந்தியவருக்கே முதலிடம் என்ற நிலையில் குறித்த நேரத்தைக் கடைபிடிக்காதவருக்கு பண இழப்பும் தோல்வியும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வெற்றிகரமான வியாபாரத்தின் ஆத்மாவே குறித்த நேரம் தான் என்பர் அறிஞர்.

நேர நிர்வாகம்

நேரத்தை நிர்வகிப்பது எப்படி (TIME MANAGEMENT) என்பது ஒரு பெரிய நிர்வாக இயலாக மாறி வருகிறது. நமக்கென கிடைக்கும் மாலை நேரங்களை - அதாவது வேலைக்குப் பிறகு உள்ள நேரத்தை எப்படிக் கழிப்பது என்பதை சிந்தனை செய்து வரையறுத்துக் கொள்ளல் இன்றியமையாதது.

1. தனிப்பட்ட நேரம்

அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து உள்ளார்ந்த சிந்தனையில் ஈடுபடுவது முழு வாழ்க்கை வாழ்ந்த அளவிற்கான அனுபவத்திற்குச் சமமாகும். நமது உள்ளார்ந்த சக்திகளை, திறமைகளை வெளிப்படுத்த தேவையான முயற்சிகளை பற்றி எண்ணிப் பார்க்க இந்த மாலை நேரம் உதவ முடியும்.

நம்மை பாதிக்கும் விஷயங்களில் எதிர் விளைவுகளைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவதை விட்டுவிட்டு நாம் முன்னேற உதவும் செயல்களை நினைத்து உந்துதலுடன் செயலாற்ற ஆரம்பிக்க வேண்டும்.

2. மனைவி மக்களுக்காக

மனைவியுடனும், குடும்பத்துடனும் தினமும் சற்று நேரம் செலவழிப்பது, வார இறுதியில் வெளியிடங்களுக்குச் செல்வது - இவையெல்லாம் இன்றியமையாத குடும்பப் பிணைப்பை வலுவுள்ளதாக ஆக்கும்.

3. வேலைக்காக

செய்யும் தொழிலில் திறமைகளை வளர்ப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். எந்த வேலையையும் இன்னும் சற்று சிறப்பாகச் செய்ய வழியுண்டு. அந்த வழியைக் காண நேரம் ஒதுக்க வேண்டும்.

4. உடல் நலம்

காலை, மாலையில் நடைப்பயிற்சி, தினமும் சிறிது தேகப்பயிற்சி இவற்றிற்காக 30 நிமிட நேரம் ஒதுக்குதல் நலம். நல்ல உணவுப் பழக்கம், குறித்த நேரத்தில் சாப்பிடுதல் இவற்றால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

5. நிதி நிலை

அன்றாடம் செய்த வரவு செலவுக் கணக்கைச் சரி பார்க்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். வரி செலுத்துதல், பண முதலீடுகளைப் புதுப்பித்தல், பட்ஜெட் திட்டமிடல் இவற்றிற்கு உரிய நேரம் ஒதுக்குதல் வேண்டும்.

6. சமூக உயர்வு

நாம் வாழும் குடியிருப்பை மேம்படுத்த நமக்கு ஒரு கடமை உண்டு. அதற்கு வாரம் சிறிது நேரம் ஒதுக்குவதோடு, ஏழை மக்களின் நிலை உயர்வதற்காக முயற்சி செய்ய சிறிது நேரம் தருவதும் இந்த சமுதாய கடமையில் அடங்கும். இதில் ஏற்படும் ஆத்ம திருப்திக்கு ஈடு இணை இருக்க முடியாது.

7. ஆன்ம வளர்ச்சி

உள்ள வலிமைக்கு ஆன்மீக வளர்ச்சியே அடிப்படை. இறை நம்பிக்கையோடு பிரார்த்தனை, குடும்பத்தார் விரும்பும் சடங்குகள் இவற்றிற்கு உரிய மதிப்பு தருவதோடு தனது ஆத்ம முன்னேற்றத்திற்கும் நேரம் ஒதுக்குதல் இன்றியமையாதது.

இப்படி தனிப்பட்ட நிலை, குடும்பம், சமுதாய வளர்ச்சி ஆகிய அனைத்திற்கும் நேரத்தை ஒரு வெற்றியாளரால் மட்டுமே தர முடியும். வெற்றியாளர்களைக் கூர்ந்து கவனித்தால் நேரத்தை எவ்வளவு கவனமாக பயன்படுத்தி தம் கொள்கையைக் கடைப்பிடித்து குறிக்கோளை நிறைவேற்றுகின்றனர் என்பது புரியும்.

நேர நிர்வாகம் என்பது உண்மையில் சொல்லப் போனால் தன்னைத் தானே நிர்வகிப்பது ஆகும். அது ஒரு சிந்தனை முறை. முக்கியத்திற்கு முதலிடம் கொடுத்து (First Things First) தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் வாழ்க்கை முறை!

இன்றே இப்பொழுதே

எல்லையற்ற கால வெள்ளத்தில் "இன்று" என்பது எவ்வளவு முக்கியமானது! நேற்றைய நாள் சென்றது தான்; திரும்பி வராது. நாளைய நாளைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் இன்றோ கையில் கிடைத்த பொன்; அதை செவ்வனே பயன்படுத்தும் பழக்கத்தினாலேயே வெற்றிப்படிகளில் ஏறி விடலாம்.

9/25/2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்

ஒரு தலைவர் தொலைநோக்குப்
பார்வையில், திட்டமிடவும்,
தொண்டர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி
தரமாகச் செயல்படவும், பல்வேறு
குணநலன் கொண்டவர்களை
ஒருங்கிணைத்து, ஆக்கபூர்வமாக
இயங்கிடச் செய்யவும், அவ்வப் போது
ஆய்வு செய்து, அறிக்கைகள் மூலம்
நிவர்த்தி செய்து, வரவு செலவு திட்டத்தில்
தேர்வு பெற்றவராக இருத்தல் வேண்டும்.
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்”.
நிலைபெற்ற படைவீரர் பலர் இருந்தும், தகுந்த படைத்தலைவர் இல்லாத தானை, இருந்தும் இல்லாதது போல்தான் என படைமாட்சி அதிகாரத்திலே, நம்முடைய தெய்வப்புலவர் மிகத்தெளிவாக, தலைமை குறித்து குறிப்பிடுகிறார்.
ஒரு நிறுவனத்தின் தலைவர், ஒரு பள்ளி யின் தலைமையாசிரியர், ஒரு அரசாங்கத்தின் அமைச்சர், மற்றும் பல்வேறு வகைப்பட்ட மக்களை ஒன்று திரட்டி ஒரு பணியில் ஈடுபடுத்தி வேலை வாங்கும் தலைவர். “இப்படி நடத்து கொண்டால் நல்லது” என்று உடன் வேலைபார்ப்பவர்கள் விரும்புவதை நான் இங்கே சொல்ல வரவில்லை. மாறாக, நீதிநூல்கள், நிர்வாகத்துறை நூல்களை உலக அறிஞர்கள் ஆராய்ந்து அறிந்து, நல்ல முறையில் எப்படி நிர்வாகம் செய்வது என்பதற்குக் கண்ட பல வழிமுறைகளில், ஒரு சிலவற்றை இதன் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதே என் நோக்கமாகும்.
“தலைவர்” நடுநிலைக் கொள்கை உடையவராக இருக்க வேண்டும். அப்படி உடன் இருப்பவர்கள் எல்லாரும் உணரும்படி நடந்து கொள்ள வேண்டும். “நியாயமானதைச் செய்வார்” என்ற பெயர் நிலைத்து விட்டால் பின்னர் ஒரு செயலைத் தனக்காக முயன்றும் முடியாமற் போனாலும் கூட அவர் செய்திருப்பார் முறையாக இருந்திருந்தால்” என்று உடன் வேலை செய்வோர் தம்மைத்தாமே சமாதானம் செய்து கொள்வார் களே அன்றிக் குறைகூற மாட்டார்கள்.
ஒரு தலைசிறந்த தலைமைக்கு
தேவையான திறமைகள்
1. திட்டமிடுதல் – Planning
2. வடிவமைத்தல் – Organising
3. நியமித்தல் – Staffing
4. இயக்குதல் – Directing
5. ஒருங்கிணைத்தல் – Co-ordinating
6. அறிக்கை அளித்தல் – Reporting
7. வரவு செலவு திட்டமிடல் – Budgeting
ஒரு தலைமை, வெற்றிகரமான, தீர்க்கதரிசனமான, முடிவை எடுக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்:
1. எடுக்கப்போகும் முடிவை குறித்த நோக்கங்கள் தெள்ளத் தெளிவாக இருத்தல் வேண்டும்.
2. முடிவு எடுத்தலுக்கு தேவையான தகவல்கள் மிகச் சரியாகவும், போதுமானவையாகவும் இருக்க வேண்டும்.
3. புதுப்புது மாற்றுத் தீர்வுகளை உருவாக்கத் தயங்கக்கூடாது.
4. எடுக்கப்படும் முடிவு மாற்றம் செய்யக் கூடிய வகையில் அமைதல் வேண்டும்.
5. எந்த பிரச்சனைக்கும் முடிவு காணும் போது அதை செயல்படுத்தும் போது, அதற்கு சம்பந்தப்பட்டவைகளுடன் கலந்தலோசிக்க வேண்டும்.
6. முடிவுகள் முறையாக அறிவிப்பூர்வமாக, தெளிவானதாக, சம்பந்தப்பட்டோர் அனைவருக்கும் புரியுமாறு அறிவிக்க வேண்டும்.
7. தீர்வுகளுக்கு போதிய நேரம் கொடுத்து, காலக்கெடுக்குள் நிறைவேற்றவேண்டும்.
8. முடிவுகள் சரிவர நிறைவேற்றப் படுகின்றதா என்பதைப் பின் தொடர்ந்து பார்க்க வேண்டும்.
தலைமை : வெற்றிகரமான, கமிட்டி அமைப்புக்கான வழிவகைகள்
1. ஒவ்வொரு கமிட்டியின் நோக்கமும் தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும். இது எழுத்துவடிவில் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்கும். காலவிரயம் இருக்காது.
2. கமிட்டியின் அதிகாரவரம்பு நிர்ணயிக்கப் படுதல் இன்றியமையாதது, அதன் அதிகாரம், ஆய்வு செய்வதற்கா, ஆலோசனை வழங்குவதற்கா, பரிந்துரை செய்வதற்கா, அல்லது முடிவு எடுத்து செயல்படுவதற்கா என்பதை முன்னமே தீர்மானிக்க வேண்டும்.
3. கமிட்டி மூன்றுபேர் கொண்டிருந்தால் அதிலே இருவர் சேர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துவர், மாறாக 10, 15 பேர் கொண்டு அமைத்தால் அது சந்தைக்கடையாகி விடும். வெற்றிகரமான கமிட்டி என்பது ஐந்து நபர்கள் கொண்ட அமைப்பானதாகும்.
4. கமிட்டியின் தலைவர் மிகவும் கவன மாகத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். அவர் தீர்க்கமாகத் திட்டமிட்டு, நிகழ்ச்சிநிரல் தயாரித்து, உரிய காலத்தே, உறுப்பினர்களுக்குப் போதிய தகவல்கள் தந்து, கூட்டத்தை செவ்வனே நடத்தினால், குறைகள் பல களையப் படும். தலைவர்தான் கூட்டத்தின் சுருதியை, சரியாக சேர்க்கவும், விவாதம் தடம்புறளாமல் இருக்கவும், கருத்துக்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்லவும் முடியும்.
5. தலைவர் போன்றே கமிட்டி உறுப்பினரும் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். ஏன் என்றால், வெற்றி அவர்களின் தகுதி, திறமை, நேர்மையை பொறுத்தே அமைகிறது. அவர்களுக்கு, கருத்து சமரசம் செய்து கொள்ளாமல், தீர்மானிக்க உதவும். விவேகம் இருத்தல் வேண்டும். பிறர் புரிந்து கொள்ளும்படி பேசும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
6. கமிட்டி அமைப்பின், செலவுக்கு ஏற்ற, பயன் இருத்தல் மிக, மிக முக்கியம்.
7. கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிதல் வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும், விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். மாற்றுக்கருத்துக்கு இடமளித்தல் மிக முக்கியம்.
8. கமிட்டி அமைப்பின் செயல்பாட்டை அவ்வப்பொழுது, மதிப்பீடு செய்தல் வேண்டும். பயனற்ற கமிட்டியை கலைத்து விட தயங்கக்கூடாது. கமிட்டி யின் பரிந்துரைகளும், தீர்மானங்களும் நடை முறைப்படுத்தப்படுகிறதா என கண் காணிக்க வேண்டும்.
9. கமிட்டியின் செயலர், பல்திறன் கொண்டவ ராகவும், நிலையாகப் பணி செய்யக்கூடிய வராகவும், நேர்மையுடையவராகவும், இருப்பது அவசியம். அவரால்தான் கமிட்டி யின் செயல் பாட்டை செவ்வனே கவனிக்க இயலும். கமிட்டிக்கு ஸ்திரத்தன்மையை கொடுப் பதும் அவர்தான்.
ஒரு திறமையான அமைப்புக்கான அடையாளங்கள்
1. சரியான வேலையை, சரியான நபர் கொண்டு, சரியான இடத்திலிருந்து, சரியாகச் செய்வதற்கான, தளத்தையும் களத்தையும், அமைத்துக்கொடுத்தல்.
2. அதிகாரம் பரவலாக்கப் படுவதற்கு சாதகமாக இருத்தல், அதாவது அமைப்பு இயந்திரமாக இயங்காமல், உயிர் துடிப்புள்ள உடல்போல் செயல்படல் வேண்டும்.
3. வள ஆதாரங்களான, மனிதவளம், நிதிவளம், பொருள்வளம், மூலதனவளம், போன்றவை முழுமையாகப் பயன்படுத்து வதற்கு, ஏற்றதாக இருத்தல். நவீன தகவல் தொழில்நுட்பம் பயன்பாடும், மாற்றங் களுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும்படியும் அமைதல் வேண்டும்.
4. அமைப்பின், அதிகாரமும், கடமையும், பொறுப்பும், சுதந்திரமாகப் பிரயோகிக் கப்படும்போது பணியாளர்களின் படைப்பாற்றல் பன்மடங்கு பெருகும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு தலைவர் தொலைநோக்குப் பார்வையில், திட்டமிடவும், தொண்டர்களுக்குத் தன்னம் பிக்கை ஊட்டி தரமாகச் செயல்படவும், பல்வேறு குணநலன் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, ஆக்கபூர்வமாக இயங்கிடச் செய்யவும், அவ்வப் போது ஆய்வு செய்து, அறிக்கைகள் மூலம் நிவர்த்தி செய்து, வரவு செலவு திட்டத்தில் தேர்வு பெற்றவராக இருத்தல் வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று!
என்ற வள்ளுவப் பெருந்தகையின், நெறி தவறாதவராக இருப்பவரே மிகச் சிறந்த தலைவராவர்.

நன்றி:-  ஏ.ஜி. மாரிமுத்துராஜ், தன்னம்பிக்கை.

9/23/2010

பிரபஞ்ச விதி - ஓஷோ

கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.

தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
--ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர்)
இன்டர்நெட்

யசோதை குழந்தை கண்ணன் வாயை திறந்தபோது உலகமே தெரிந்தது
இது புராணம்

நான் எனது லேப்-டாப் யை  திறந்தேன்
உலகமே தெரிந்தது.
இது நவீனம்.

-Parthasarathi, Saudi Arabia

பயணம்
செல்வம் சேர்க்க மாத்திரம் அல்ல 
 தன்னை அறிய
உலகம் புரிய
உள் அமைதி சேர்க்க
ஆத்ம ஞானம் பெற
மேற்கொண்டேன் பயணம்.       

-sarathi, Saudi Arabia

9/21/2010

ஆழ்வார்கள்

முதலில் ஆழ்வார் என்கிற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.
பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொல்வார்கள். பகவான் விஷ்ணுவாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எதிலும் தீவிரமாக ஆழ்பவர்களை ஆழ்வார் என்று அழைக்கலாம். துக்கத்தில், துயரத்தில், சந்தோஷத்தில் ஆழ்வாரும் உண்டு. ஏ.கே. ராமானுஜன் ஆழ்வார் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த புத்தகத்துக்கு Hymns for the Drowning என்று பெயர் வைத்தார். வெள்ளத்தில் மூழ்குபவர்களுக்கான பாடல்கள் என்று. பக்தி வெள்ளம்.
'ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்' என்று திருமழிசையாழ்வாரே நான்முகன் திருவந்தாதியில் சொல்லியிருக்கிறார். நான் சொல்லப் போகும் ஆழ்வார்கள் தனிச் சிறப்புள்ளவர்கள்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் அருமையான வைணவ நூலின் பாடல்களை இயற்றியவர்கள். ஒரே ஒரு பாடலை முதலில் மாதிரி பார்ப்போம்.

நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை

ஏழாம் நூற்றாண்டில் - எழுதப்பட்ட இந்த வெண்பாவின் அற்புதம் ஏறக்குறைய உங்களுக்குப் புரியும் என்று எண்ணுகிறேன். கடவுளைப் பார்த்து,

நீதான் எல்லா உலகமும்.
பூமியில் நிலைத்திருப்பவை யெல்லாம் உன்அருள்.
நீதான் தேவர்களுக்கெல்லாம் தேவன்.
நீதான் நெருப்பு, நீதான் மலை, நீதான்
எட்டுத் திசைகளும்
நீதான் சூரியன் சந்திரன்.

இவ்வகையிலான அபாரமான நாலாயிரம் பாடல்களைக் கொண்டது திவ்வியப் பிரபந்தம் - அவைகளைப் பாடிய ஆழ்வார்கள் பற்றியது இந்தக் கட்டுரைத் தொடர்.
ஆழ்வார்கள் பத்துப் பேர். அவர்கள் பெயர்கள் இவை : பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், இவர்களுடன் விஷ்ணுவை நேரடியாகப் பாடாமல் நம்மாழ்வாரைப் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடிய மதுரகவியாழ்வாரையும் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பாடிய பெண்பாற் புலவரான ஆண்டாளையும் சேர்த்துக் கொண்டு ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர் என்று சொல்வதும் உண்டு. பெண்களையும் ஆழ்வார் என்று குறிப்பிடும் பழக்கம் - பழந்தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. ஆழ்வார் பராந்தகன், குந்தவைப் பிராட்டியார், மதுரகவியாழ்வார்.
குலோத்துங்க சோழன் மகளார் அம்மங்கையாழ்வார் போன்ற சோழ சாசனங்களிலிருந்து, இந்தச் சொல் இருபாலார்க்கும் பயன்பட்டது என்பது தெரிகிறது. ஆண்டாள் என்னும் பெயரில் - ஆள் என்பதே ஆழ்வாரின் - பகுதி என்று எண்ண வைக்கிறது.
ஆழ்வார் என்கிற சொல்லை ஜைன, பௌத்த ஞானிகளுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக மயித்திரியாழ்வார் என்று புத்ததேவர்க்குப் பெயருள்ளதைத் தக்கயாகப் பரணி என்னும் நூல் சொல்கிறது. அவிரோதியாழ்வார் என்று ஒரு ஜைன முனிவருக்குப் பெயர் இருந்திருக்கிறது.
ஆழ்வார் என்ற பட்டம், நேரடியாகக் கடவுள் என்கிற பொருளிலும் - ஆழ்வார் திருவரங்கத் தேவர்- என்று சோழ சாஸனங்களில் வருகிறது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை இயற்றிய ஆழ்வார்கள் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. சங்க காலத்துக்குப் பிற்பட்டும் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் காலத்துக்கு முற்பட்டும் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். இவர்கள் காலத்தைப் பற்றிப் பின்னால் விவரமாகச் சொல்லப் போகிறோம்.
இவர்கள் ஒரே குலத்தை சேர்ந்தவர்களும் இல்லை. முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் 'அயோநிஜர்கள்' என்று விவரிக்கப்படுகிறார்கள். இவர்கள் கண்டெடுக்கப்பட்டவர்கள் என்பதும் பிற்பாடு ரிஷிகளாக இருந்தவர்கள் என்பதும் தெரிகிறது. திருமழிசையாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்பது அவர் பாட்டிலிருந்தே தெரிகிறது.
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
என்று அவரே சொல்லிக் கொள்கிறார். பெரியாழ்வார் வேயர் குல அந்தணர் (மூங்கிலைச் சார்ந்த பார்ப்பனக் குடியினரை வேயர் என்று சொன்னார்கள்). பெரியாழ்வாரால் ஒரு துளசித் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை, ஆண்டாள். திருமங்கையாழ்வார் கள்வர் குலத்தைச் சார்ந்தவர். குலசேகர ஆழ்வார் சேரநாட்டு அரச குலத்தைச் சார்ந்தவர். திருப்பாணாழ்வார் அந்திம வம்சம் பஞ்சம குலம் என்று அப்போது அழைக்கப்பட்ட பாண வம்சத்தில் பிறந்தவர். தொண்டரடிப் பொடியாழ்வார் பிராமணர். நம்மாழ்வார் வெள்ளாள சிற்றரசர் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் மாணாக்கரான மதுரகவி, பிராமணர். இவ்வாறு எல்லாக் குலங்களிலும் ஆழ்வார்கள் இருந்திருக்கிறார்கள்.
சாதி வித்தியாசம் பார்க்காமலிருப்பது வைணவக் கருத்துக்களில் தலையாயது. அந்தணருக்கான கிரியைகள் அவர்களுக்கு முக்கியமில்லை. அவைகளைப் புறக்கணித்தார்கள் என்பதற்குக்கூட ஆதாரம் இருக்கிறது. அந்தணரான தொண்டரடிப் பொடியாழ்வார்,

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள்
அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன்

- என்று சொல்லும்போது தினம் குளிப்பதும் மூன்று முறை அக்கினி ஹோத்திரம் செய்வதும் போன்ற rituals முக்கியமில்லை என்பதை வலியுறுத்துகிறார்.
முதலாழ்வாரான பொய்கையாழ்வார்,

புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும்
அந்தியால் - ஆம்பயன் அங்கென்?

- என்று பாடும்போது பகவானை மனத்தால் நினைக்காமல் வேறு மந்திரங்களை உருப்போட்டுச் செய்யும் சந்தியாவந்தனத்தால் பயனே இல்லை என்று கூறுகிறார். ஆரம்பத்திலிருந்தே சடங்குகள் முக்கியமில்லை என்கிறது வைணவம்.
தொண்டரடிப் பொடியாழ்வார்,

இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின்

- என்று வைணவராக இருந்தால் போதும்; குலம் முக்கியமில்லை; அவர்களைத் தொழுது அவர்களுக்குக் கொடுக்கலாம், கொள்ளலாம் என்கிற சாதியற்ற வைணவத்தின் ஆணிவேர் ராமானுஜர் காலத்துக்கு முன்பே இருந்திருக்கிறது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் நம்மாழ்வார்,

''குலத்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு
ஆள் என்று உள்
கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே''

எத்தனைதான் கீழான சாதியராக இருந்தாலும் சக்கரத்தை வலது கையில் வைத்திருக்கும் விஷ்ணுவின் ஆள் நான் என்று உள் கலந்துவிட்டால், அவர்களின் அடியவர்களுக்கு அடியவர் நாங்கள் என்று கூறும் இந்தக் குரல் எட்டாம் நூற்றாண்டிலேயே சாதி பாராட்டாத பக்திக் குரல்.
பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களின் வரிசைக் கிரமம் அவைகளைத் தொகுத்த நாதமுனிகள் அமைத்தது. இக்கட்டுரைத் தொடரில் அந்த வரிசையைப் பயன்படுத்தினால் - ஒரே ஆழ்வாருக்குப் பலமுறை திரும்ப வரவேண்டியிருக்கும். அதனால் ஆழ்வார்கள் வாழ்ந்த கால வரிசைப்படி அவர்கள் பாடல்களையும் தத்துவங்களையும் விளக்க முற்படுகிறேன். இக்கட்டுரையில் உள்ள வைணவக் கருத்துக்கள் யாவும் பெரிய மகான்களும் உரையெழுதியவர்களும் வியாக்யானக்காரர்களும் கொடுத்த கருத்துக்கள். என் சொந்தக் கருத்துக்கள் அங்கங்கே இருப்பின் அதை நான் தனியாகக் குறிப்பிடுகிறேன். பிரபந்தத்தில் என் ஈடுபாடு நான் ஒரு வைணவன் என்கிற கோணத்தில் மட்டும் இல்லை. அதன் தமிழ் நடையும் சொற் பிரயோகங்களும் என் எழுத்துத் திறமைக்கு வலுவான பின்னணியாக இருந்திருக்கின்றன. பிரபந்தத்தில் குறிப்பாக நம்மாழ்வார் திருவாய் மொழியில் உள்ள பிரபஞ்சக் கருத்துக்கள் இயற்பியல் காஸ்மாலஜி கருத்துக்களுடன் ஒத்துப் போவதை ஓர் அறிவியல் உபாசகன் என்ற முறையில் வியந்திருக்கிறேன். அந்த வியப்புக்களையும் உங்களுக்குக் கொடுக்க முயல்கிறேன். உதாரணமாக -
நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்று இவ்வாறு துவங்குகிறது.

ஒன்றும்தேவும் உலகும் உயிரும் யாதுமில்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர்
உலகோடு உயிர் படைத்தான்

ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஒரு கட்டுரையில் (The Origin of the universe),
Although Science may solve the problem of how the universe began, it cannot answer the question why does the universe bother to exist என்கிறார். அதற்கு ஆதிகாரணமாக ஒரு கடவுள் தேவைப்படுகிறார் என்பதை அறிவியலாளர்கள் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள். எதுவுமே இல்லாத, காலம் கூடத் துவங்காத அந்த முதற் கணத்திற்கு முற்பட்ட நிலையைப் பற்றி இயற்பியல் Singularity என்கிறது. நம்மாழ்வாரும் அதைத்தான் சொல்கிறார்.
இந்த முன்னுரையுடன் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வாரின் முதல் பாடலைப் பார்ப்போம்.

வையம் தகளியா(ய்) வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே

என்று கம்பீரமான மிகப் பெரிய விளக்கு ஒன்றை ஏற்றுகிறார் பொய்கையாழ்வார்.
உலகம்தான் அகல், கடல்தான் நெய், சூரியன்தான் ஒளிப்பிழம்பு, இம்மாதிரியான பிரம்மாண்டமான விளக்கை சக்கரம் ஏந்திய விஷ்ணுவின் பாதத்தில் ஏற்றி, சொற்களால் ஒரு மாலை அணிவித்தேன், என் துன்பக்கடல் எல்லாம் நீங்குக என்று.
இதைச் சொல் மாலை என்பது எத்தனை பொருத்தமானது!
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் ஆளுக்கு நூறு பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அவை அந்தாதி என்னும் வடிவில் உள்ளன. அதாவது, முதல் பாடலின் கடைசி வரியில் அடுத்த பாடலின் ஆரம்ப வார்த்தை இருக்கும். இப்படிச் சொற்களை மாலை போன்று தொடுக்கிறார்கள் மூவரும். அதில் விசேஷம் நூறாவது பாட்டின் கடைசி வார்த்தை முதல் பாட்டின் முதல் வார்த்தை. உதாரணமாக முதல் பாடல் 'வையம்' என்று ஆரம்பிக்கிறது. 'என்று' என்பதில் முடிகிறது. அடுத்த பாட்டு - 'என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது' என்று துவங்குகிறது. பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியின் நூறாவது பாடல் மாயவனை மனத்து வை என முடிகிறது! மாலை ஒரு சுற்று முற்றுப் பெற்று விட்டதல்லவா?
வைணவ சம்பிரதாயத்தின் கருத்துக்களைப் பரப்பும் பெரியோர்களை ஆழ்வார்கள், ஆசாரியர்கள் என்று இரு வகைப்படுத்துவார்கள். இவர்களில் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர். ஆசாரியார் என்போர் ஆழ்வார்களுக்குப் பிற்பட்டவர்கள். பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் இவர்களில் முதலானவர். ஆழ்வார்கள் சொன்ன வழியைப் பின்பற்றி வைணவக் கருத்துக்களை நாட்டில் பரப்பி நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள் ஆசாரியார்கள். இன்றைய நாட்களில் கூட ஒவ்வொரு வைணவனுக்கும் ஒரு ஆசாரியர் இருப்பார். அவரிடம் தத்துவ விளக்கங்கள் கேட்டறியலாம். இந்த மரபு தொடர்கிறது.
ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் உள்ளன.
டாக்டர் மு.இராகவையங்கார் அவர்கள் எழுதிய ''ஆழ்வார்கள் கால நிலை'' என்கிற புத்தகம் முதன்மையானது. அதில் வரும் கருத்துக்கள் அத்தனையுடனும் ஒத்துப் போக முடியாவிட்டாலும் ஐயங்காரின் ஆராய்ச்சி முறை விஞ்ஞானபூர்வமானது.
வைணவ வரலாறுகள் அவ்வளவாகச் சரித்திர உண்மையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கருடவாகன பண்டிதர் என்பவர் ராமானுஜரின் காலத்தவர். அவர் சமஸ்க்ருதத்தில் 'திவ்ய சூரிசரித்திரம்' என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதிலும் பின்பழகிய பெருமாள் சீயர் என்பவரால் ஆக்கப்பட்ட ஆறாயிரப்படி குருபரம்பரை என்கிற, சமஸ்க்ருதமும் தமிழும் கலந்த மணிப்ரவாள நடையில் எழுதப்பட்ட, நூலும் ஆழ்வார்களின் பிறந்த தினங்கள், அவர்கள் வாழ்வின் சம்பவங்களை விவரிக்கின்றன.
ஆனால், நவீன ஆராய்ச்சி முறைப்படி உணர்ச்சியும் பக்தியும் கலந்த இந்தக் கதைகளை சரித்திரச் சான்றுகளாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் உள்ளது. எனவே, ஆழ்வார் பாடல்களிலேயே கிடைக்கும் அகச்சான்றுகளிலிருந்தும் மற்ற, பக்தி சாராத இலக்கண இலக்கிய நூல்களின் மேற்கோள்களிலிருந்தும் தற்செயலான வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் ஆழ்வார்கள் காலத்தை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

தியானம்

தியானம்
தூக்கத்தின் போழுது நம்மை அறியாமல நாம்தியானத்தில் ஈடுபடுகிறொம்.
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறநுகுவது.
உறக்கத்தின் போழுது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.
தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடநுகு விரிவடைய செய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவை திறக்கவும் விரிவடையவும்க் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்த நம்மை சந்தொஷப்ப்டுத்தும்க். நம் ஆரொக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களை தோடசேய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.
Spiritual Reality video is now available in Tamil version as 'AANMIKA YATARTAM'
தியானத்தின்போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும்க தாண்டி
"தியானம்" பெற்கொள்ள முதலில் நம் உடல் மறுற்ம் மனம் சம்மந்தப்பட்ட சேயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல்க அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யொசிப்ப்து பொன்ற சேயல்களையும்.
"தியானம்" சேய்யும் முறை நாம் தேரிந்து கோள்ளலாம்.
தியானத்தின் போழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது கட்டுப்படுத்தி நம் உடலை கட்டூப்படுத்தி ஒரே இடத்தில்க அமர சேய்வது.
எந்த முறையிலும்க அமர்ந்து கோள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கோள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்துகோண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகோண்டோ தியானம் மேற்கோளள்லாம்க் நமக்கு எந்த இடத்தில் அமர்ந்துகோண்டு தியானம் சேய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில்க அமர்ந்துகோண்டு தியானம் சேய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கோள்ளுங்கள்.
கால்களை சப்பண்மிட்டுக் கோள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மேதுவாக கோடுங்கள்.
அமைதியான நிலையில் சகஜ நில்லைக்கு வாருங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கோள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கோள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
மந்திர்ங்களை ஒதும்போழுதோ அல்லது முணுமுணுக்கும் போழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் மூள்றிலும் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் சேய்யும்.
மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அரிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமேன்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க தூவங்கவேன்டும்.
கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்க தூவங்கவேண்டிம்.
மூச்சு விடுவது ஒரு சேயலாக எண்ணி சேய்யக்கூடாது.
காற்றை உளேள் இமூப்பதும், வேளியே விடுவதும்க நமக்கு தேரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வேளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபேற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.
எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கோள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்போழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மேதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்த நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக்கோளுள்ம்.
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்க்.
இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான்க பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாக சேய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும்க்.
இதை தேய்வீக வடிவம் என்றும் கூற்லாம்

9/14/2010

தபால்பெட்டி

தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

-கல்யாண்ஜி கவிதைகள்

9/13/2010

குறையை நிறையாக்கலாம்

ஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.
அங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்க வரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு நீக்கிவிட்டார். மிகுந்த வருத்ததுடன் சோர்வாகத் தேவாலயத்தைவிட்டு வெளிய வந்த ஏழைக்கு வேதனை. சொல்லமுடியாத வேதனை. பலவருட பந்தம் பறிபோய்விட்டது. அழுதபடி திரும்பி திரும்பி தேவாலையத்தை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார். மனவேதனை மறைய ஒரு சிகரேட் பிடிக்கலாம் என்று நினைத்தால் பாக்கெட்டில் ஒரு சிகரெட் இல்லை. பக்கத்தில் பார்த்தால் சிகரெட் கடைகூட ஓன்றும் இல்லை. நெடுந்தூரம் நடந்துவிட்டார் ம்ஹ�ம்... சிகெரட் கடையே இல்லை.

பட்டென்று அவருக்கு பொறித் தட்டியது. " நாம் ஏன் இங்கு சிறிய பெட்டிக் கடை வைக்கக் கூடாது... இங்கே வருகிற பலபேருக்கு பயன்படுமே" என்று முடிவு செய்தார். வெளியே அனுப்பும் போது மதகுரு கொடுத்த சிறிய தொகையை முதலாக்கி சிகரெட்டுடன் மற்றும் பல பொருட்களுடன் கடை ஆரம்பித்தார். வியாபாரம் அமோகமாக நடந்தது... சிறிது காலத்தில் கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தை பெரியதாக்கினார். சில மாதங்களில் பெரிய பணக்கரார் ஆகிவிட்டார்.

இவரிடம் பணம் இருப்பது தெரிந்து ஒரு வங்கியின் மேலாளர் தங்கள் வங்கியில் சேமிக்கும்படியும் வட்டி கிடைக்கும் என்றும் சொல்லி சம்மதிக்க வைத்தார். முடிவில் சேமிக்க விண்ணப்பபடிவங்கள் நிறைவு செய்துவிட்டு பணக்காரரிடம், " கையொப்பம் போடுங்கள் " என்றார். பணக்காரருக்கு வந்ததே கோபம்... நிறைய சத்தம் போட்டுவிட்டு முடிவில், தனக்கு கையெழுத்து போடத் தெரியாது என்று முடித்தார்.

வங்கி மேலாளர் " அட... கையெழுத்து கூட போடத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய வியாபாரியாகி விட்டீர்கள்... உங்களுக்கு அதுவும் தெரிந்திருந்தால் அடடா நீங்கள் எங்கேயோ இருந்திருப்பீர்கள்? " என்று புகழ்ந்ததும் " வாயை மூடுங்கள்.. எனக்கு மட்டும் கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் கூட்டி பெருக்கும் தொழிலாளியாகத்தான் இன்னும் இருந்திருப்பேன் " என்று கர்ஜித்தார்.

இது வெறும் கதையல்ல. குறைகூட ஒருநாளில் நிறைவாகலாம். நம்மில் பலருக்கு பல குறைகள் இருக்கும் அதை நினைத்து வருத்தபடுவது உண்டு. வருத்தபடுவதால் எந்த மாற்றமும் நிகழப்போதில்லை. அந்த குறையை நமது பலமாக மாற்ற என்ன செய்யலாம் என்று எண்ணி அதை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்...

9/09/2010

ஆத்ம ஜயம்

ஆத்ம ஜயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்


கவர்ந்திட மாட்டாவோ?-அட

மண்ணில் தெரியுது வானம்,அதுநம்

வசப்பட லாகாதோ?

எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்

கிறுதியிற் சோர்வோமோ,

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்

மேவு பராசக்தியே!

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்

எத்தனை மேன்மைகளோ!

தன்னை வென்றா லவை யாவும் பெறுவது

சத்திய மாகுமென்றே

முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்

முற்றுமுணர்ந்த பின்னும்

தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு

தாழ்வுற்று நிற்போமோ?



மகாகவி பாரதியார் கவிதை

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அ

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்


சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.


குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.

தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.


ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.