1/23/2011

ஜென் கதை

ஒரு மடாலயத்தில் துறவியும் அவரது சிஷ்யர்களும் மாலை நேரம் தியானம் செய்து கொண்டிருந்தனர். மடத்திலிருந்த ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்ததால், தியானத்தில் இருந்த ஒருமைப்பாட்டைக் கலைத்துக் கொண்டிருந்தது. அதனால் அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார்.

சில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தனர். மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப் பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள் கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தனர்.
                                                     
                                                      ************************************
ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற வேண்டி ஒருவன் வந்தான்.
'ஐயா! நான் ஞானோதயம் பெற விரும்புகிறேன். அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?"
"எப்படியும் பத்து வருடங்கள் ஆகும்" என்றார் குரு. 'என்ன பத்து ஆண்டுகளா?' அதிர்ச்சியில் கேட்டான் அவன்.
'தோராயமாகச் சொன்னேன். சரியாகச் சொன்னால் இருபது வருடங்கள் ஆகும்'
'என்ன? இரட்டிப்பாகச் சொல்கிaர்களே' கோபப்பட்டான் அவன்.
'இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டால் முப்பது வருடங்கள் ஆகும்' என்றார் குரு.
'ஞானம் என்பது சென்றடையும் ஓர் இடமோ, முயன்று கைப்பற்றும் ஓர் இலக்கோ அல்ல. அது பயணம். வெறும் பயணம்தான். வேகமான பயணம். வழியிலுள்ள காட்சிகள் எதையும் காணவிடாது. வெகுசீக்கிரம் எதையும் கற்க வேண்டும் என்று எண்ணும் போது எதையுமே சரிவர அறிய முடியாது போகும். சிறியதிலி ருந்துதான் பெரியது உண்டாகும் மெளனத்திலிருந்துதான் ஓசை உண்டா கும். இதை உணர்வதுதான் ஞானம்'

-Partha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக